search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைசென்ஸ்"

    • முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
    • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சாப்ட்வேர் மூலம் புதுப்பிப்பவர்களின் ஆதார் கார்டு, லைசென்ஸ், செல்போன் எண், ரத்த வகை ஆகியவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவேற்ற எண் வழங்கப்படும்.

    இந்த எளிமையான நடைமுறை வந்த பிறகு காத்திருக்க வேண்டியது இல்லை.

    ஆனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆட்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம்.

    முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.

    பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறுகையில், "லைசென்ஸ் புதுப்பிக்க முடியாமல் 15 நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.

    எங்கள் உறவினர்கள் செங்குன்றம், அயனாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    ஆனால் அண்ணா நகரில் மட்டும் இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    • சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
    • மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
    • சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சீட்பெல்ட் அணியாதவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என பல்வேறு விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 6 மாதத்தில் ஜூன் மாதம் வரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் லைசென்சை போலீசார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    அதிவேகமாக சென்ற 7 ஆயிரத்து 57 பேர் சிக்கியுள்ளனர். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 748 வழக்குகளும், போடப்பட்டு உள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 272 பேர் சிக்கியுள்ளனர்.

    சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவோர் உரிமம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • ஆரோக்கியமாக பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு லைசென்ஸ் வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். சவாரி தொழிலில் ஏராளமான குதிரைகள் இருக்கின்றன. இது தவிர குதிரை வண்டிகளும் ஆங்காங்கே உள்ளன. இந்த வண்டிகளிலும் பலர் சவாரி செல்வது வழக்கம். மேலும் பந்தயத்துக்காகவும் சில குதிரைகளை வளர்க்கின்றனர். இதனிடையே சில இடங்களில் குதிரை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக கால்நடை நலவாரியத்துக்கு புகார்கள் வந்தன. மேலும் சில குதிரைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இறப்பதாகவும் தெரியவந்தது. இதை தடுக்க தமிழ்நாடு கால்நடை நலவாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக குதிரைகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவோர் உரிமம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை நலவாரிய உறுப்பினர் சுருதி வினோத்ராஜ் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மட்டும் சவாரி உள்ளிட்ட வணிக ரீதியாக 150-க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவற்றை அதன் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவை ஆரோக்கியமாக பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு லைசென்ஸ் வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

    இதற்கிடையே குதிரைகளுக்காக பிரத்யேகமாக சென்னை திருவல்லிக்கேணியில் புகலிடம் அமைக்க சென்னை கலெக்டரிடம் விலங்குகள் உரிமை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அந்த அமைப்பை சேர்ந்த ஷிரானி பெரேரோ கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக மெரினா கடற்கரை குதிரைகள் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவற்றுக்கு சரியான உணவு, பராமரிப்பு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இந்த குதிரைகள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாக்க ஒரே இடத்தில் 200 குதிரைகள் கட்டும் அளவுக்கு புகலிடம் அமைக்க கேட்டுள்ளோம். அதற்கான இடவசதி திருவல்லிக்கேணியில் உள்ளது என்றார்.

    • லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
    • சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.

    இங்கு கார் மற்றும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

    தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 100 பேர் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டு இதற்கான ஒதுக்கீடு நாள் ஒன்றுக்கு 50 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கான பணியினை நிக் என்ற நிறுவனம் எழிலகத்தில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு காருக்கு 15 நபர்களும், இருசக்கர வாகனங்களில் கியர் வாகனங்களுக்கு 20 நபர்களும் கியர் இல்லாத வாகனங்களுக்கு 15 நபர்களும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க செல்லும் போது ரெயில் டிக்கெட் போல் காலை 6 மணிக்கே முடிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்பட்ட இந்த பாதிப்பில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து புகார் அதிகமாவதால் பூந்தமல்லி 80, மீனம்பாக்கம் 70 ஆகிய இடங்களில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.

    இந்த அலுவலகத்துக்குட்பட்டு 35 டிரைவிங் பயிற்சி பல்ளிகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கே விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லைசென்ஸ் அப்பாயின்மெண்ட் கிடைக்காமல் ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏமாந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

    நான் டிரைவிங் பயிற்சி பெற்று எல்.எல்.ஆருக்கு விண்ணப்பித்து அதனுடைய கால அவகாசம் வரும் செவ்வாய் கிழமையுடன் முடிகிறது. பலமுறை ஆன்லைனில் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை. என்னைப்போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனில் ஒதுக்கீடு பெற்று கொடுக்கின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.
    • புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    சென்னை:

    புற்றுநோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

    உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

    உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே இதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடை, டீக்கடைகளில் தற்போது உள்ளதை போல் இனிவரும் நாட்களில் இஷ்டத்துக்கு பீடி, சிகரெட் விற்க முடியாது. லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கப்படும். மேலும் அந்த கடைகளில் பீடி, சிகரெட்டை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்க முடியாது.

    இந்த விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும். அதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லைசென்ஸ்’.
    • இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஜே.ஆர்.ஜி. புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான இயக்குனரின் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியான சாய்ஸ்.


    ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

    அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


    ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம். மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையுடன் பேசினார்.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
    • போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 49 பேர், அதிகபாரம் ஏற்றி வந்த 9 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 19 டிரைவர்கள், சிக்னலை மீறிய 57 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 45 பேர் உள்ளிட்ட 216 பேரின் லைசென்சை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி போதையில் வாகனம் ஓட்டிய 216 பேரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    ×