search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irregularity"

    • முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
    • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சாப்ட்வேர் மூலம் புதுப்பிப்பவர்களின் ஆதார் கார்டு, லைசென்ஸ், செல்போன் எண், ரத்த வகை ஆகியவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவேற்ற எண் வழங்கப்படும்.

    இந்த எளிமையான நடைமுறை வந்த பிறகு காத்திருக்க வேண்டியது இல்லை.

    ஆனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆட்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம்.

    முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.

    பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறுகையில், "லைசென்ஸ் புதுப்பிக்க முடியாமல் 15 நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.

    எங்கள் உறவினர்கள் செங்குன்றம், அயனாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    ஆனால் அண்ணா நகரில் மட்டும் இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    • திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
    • சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

    விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

    • கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள், இட ஒதுக்கீட்டு மீறல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அமைப்பினர் உயர் கல்வித் துறைக்கு புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து விசாரணை நடத்த உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து கண்ணன் உள்ளிட்ட 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பல்கலைக்க ழகத்தின் முறைகேடுகள் குறித்து விரிவாக அவர்கள் புகார் கூறினர். மேலும் உயர் பதவியில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 3 இடங்களில் பணிபுரிந்ததாகவும் கூறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளில் உரிய தகுதி உள்ளவரை நியமிக்காமல் தகுதி இல்லாதவரை நியமித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.

    • 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
    • இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் , மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் , தண்டபாணி, பாலமுருகன், ஜெயபாண்டியன், ஏழுமலை, விஜய், பஞ்சாசரம், அன்பழகன், ஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சேதமைடைந்த முந்திரி பயிர்களை தோட்டக்கலைத் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர் எம். புதூர், திருவந்திபுரத்தில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டு 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி ஏரி உள்ள பகுதியில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் செம்மண் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பதை சுரங்கத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடுகளாக நடக்கும் மண் குவாரிகளை இழுத்து முடவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • ஒரே நாளில் ரூ.35ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிக மான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அவற்றுக்கான வாகன பதிவெண் பலகையில் எழுத்துக்கள் இப்படித்தான் இடம்பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் வரையறுத்துள்ளது.

    அதன்படி 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 3.0 மிமீ உயரம்- 5 மி.மீ தடிமன்- 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோல வாகனங்க ளின் பின்புறம் 35 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் 65 மி.மீ உயரம், 10 மி.மீ தடிமன், 10 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் அமைய வேண்டும்.

    சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் இருக்க வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலம் வரும் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் பலகையில், எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.

    தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ள, தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.

    அடுத்தபடியாக கட்சி சின்னம், கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, சினிமா நடிகர்கள் மற்றும் சுவாமி ஆகிய படங்கள் ஒட்டப்படுகிறது. அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர். பதிவெண்ணில் முதல் 3 இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச்சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுது கின்றனர். 8055 என்ற எண்ணை BOSS என்று எழுதுகின்றனர்.

    மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தாண்டி பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் தான். அதன்படி முதல் முறை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

    அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, பாதிப்பை ஏற்படுத்திய நபர் பற்றிய விபரம் தெரியவரும். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை கண்டு கொள்வது இல்லை. பதிவெண் போர்டை விளம்பரம்- அறிவிப்பு பலகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல.

    எனவே வாகன பதிவுஎண் பலகையில் விதிகளை மீறி பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகரில் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் வாகன பதிவு எண் பலகை அதிரடி சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அதன்படி இதுவரை 1699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் தல்லாகுளம் சரகம் ஆகிய பகுதிகளில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் 735 வாகனங்கள் சிக்கின. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் ஒரே நாளில், ரூ. 35 ஆயிரம் அபராதத்தொகை வசூலாகி உள்ளது.

    அடுத்தபடியாக தகுதிச்சான்று பெற வருவோர் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் ரெயில் டிக்கெட் முறைகேடாக விற்ற ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15.44 லட்சம் மதிப்பு உள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் பிடிபட்டன. ரெயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வீட்டில் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அடுத்தபடியாக ரெயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரி யவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் சென்ற 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது.

    அகில இந்திய அளவில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் 140 சட்டவிரோத மென்பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரெயில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்திய அளவில் 143 ரெயில் நிலையங்களில் 17,756 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். ரெயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.7.37 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    194 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பிடித்து வைத்திருந்த 559 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஓடும் ரெயிலில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர் பத்திரமாக காப்பாற்றப்பட்டு உள்ளனர். ரெயிலில் தவறவிடப்பட்ட ரூ.46.5 கோடி மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெண்கள் பாதுகாப்பி ற்காக 640 ரெயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் அடங்கிய "என் தோழி" குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். ஓடும் ரெயில்களில் 209 குழந்தைகள் பிறந்து உள்ளன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×