search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதி"

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.

    இதே போல பெரிய கிணறு பகுதியை சேர்ந்த செந்தமிழ் குமரன். இவரது மகன் மயிலேஷ் (8). இவரும் அதே பள்ளியில் தங்கி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 3 பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் மனோகரன் வரவேற்றார். கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

    தலைவர் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் முன்னாள் ராணுவத்தினர் ராமதாஸ் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் தாய் செய் நல விடுதி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மோசமான நிலை ஏற்பட்டு பூட்டி போடப்பட்ட நிலையில் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவையாம்பிகை நகரில் மோசமான நிலையில் ரோடு சேதம் அடைந்து உள்ளதால் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    சுடுகாட்டு பாதைக்கு செல்லும் தெருக்களில் மரங்கள் இடையூராக இருப்பதால் மரங்களை அப்புபடுத்தி இறந்தவர்களை எடுத்துச் செல்ல இடையூர்யில்லாமல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமசபையில் பொது மக்களுடன் வலியுறுத்த ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கட்டமைப்பு பிரிவு முன்னாள் உதவி திட்ட அலுவலர் நக்கீரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத்த லைவர் உமாராணி நன்றி கூறினார்.

    • அரியலூரில் 3 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி
    • போதிய வசதி இல்லாததால் குறையும் மாணவர்கள் எண்ணிக்கை

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக்க ல்லூரி வளாகத்தில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல மாணவர்கள் விடுதி இயங்கி வந்தது.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த மாணவர் விடுதியை மாற்ற முடிவு செய்தனர்.அதை தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எழு த்துக்காரன் பட்டியில் உள்ள பேரிக்காய் செந்துறை ரவுண்டானாவில் உள்ள தனியார் நல விடுதிக்கு மாற்றியுள்ளனர்.இந்த தனியார் விடுதி கல்லூரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப் பால் உள்ளது. ஆகவே விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் தினமும் வெகு தூரம் நடந்து கல்லூ ரிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் விடுதி மாணவர்களின் எண்ணி க்கையும் சரிந்து உள்ளது.இது ஒரு புறம் இருக்க தனியார் விடுதிக்கு மாதா ந்திர வாடகை கட்டணம் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படு கிறது.கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த பழைய விடுதியில் 165 மாணவர்கள் தங்கும் வசதி இருந்தது. ஆனால் தற்போது உள்ள தனியார் விடுதியில் 96 மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளார்கள். புதியவர்க ளும் இந்த தனியார் விடுதி யை தவிர்க்கிறார்கள்.இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது,தனியார் கட்டிடத்தில் இயங்கும் நலவாழ்வு விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை என்ற போர்வை யில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.மாதா ந்திர வாடகை கூட சரியாக கொடுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, விடுதியில் (கல்லூரி வளாகத்தில்) எப்பொழுதும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையிலான தூரம் அதிக மாக இருப்பதால் மாண வர்கள் விடுதியில் தங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்

    விடுதி மாற்றப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும், புதிய நலவாழ்வு விடுதிக்கு இடம் தேர்வு செய்யாதது வருத்தம் அளி க்கிறது. கல்லூரி அருகே விடுதி கட்ட மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

    விடுதியில் தங்கி படிக்கும் 19 வயது மாணவி கூறுகை யில், கடந்த இரண்டு ஆண்டு களாக போதிய பஸ் வசதி இல்லாததால் நடந்தே கல்லூரிக்கு சென்று வருகி றேன். கல்லூரிக்கு வர குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது என்றார்,மற்றொரு விடுதியாளர் கூறுகையில், "3 கட்டில் உள்ள ஒரு அறையை பத்து மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத னால், இருவர் படு க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதுகுறித்து ஆதி திரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அதிகாரி விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டபோது, "புதிய கட்டிடம் (விடுதி) அமைக்க இடம் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார். வாடகை பாக்கியில், "அரசாங்கம் பணம் கிடைத்ததும் நாங்கள் செலுத்துவோம்" என்றார்.

    • 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பட்டுக்கோட்டை நகராட்சி க்குப்பட்ட பழனியப்பன் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    இதனை பராமரிக்க முன்அனுபவமு ள்ள தகுதிவாய்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2023 அன்று மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    மேலும் இது குறித்து தகவல்கள் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பட்டுக்கோ ட்டை நகராட்சி நகரமைப்பு பிரிவில் 15ம் தேதி வரை அலுவலக நேரத்தில் நேரடி யாக தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா?
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தலக்குளம் பட்டரிவிளை யில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் பகுதி மாணவிகள் உட்பட பலர் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் விடுதியில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதுபோல் ஒரு மாணவர் வெளியே சென்று பின்னர் திரும்பவும் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்த ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை காணொலி காட்சி வழியாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து விடுதியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகா தேவி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.
    • முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது.

    தென்காசி:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 35). இவர் சென்னை தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

    கொலை

    இவரது உடன்பிறந்த அக்காள் கணவர் பாளையை சேர்ந்த நாராயண மூர்த்தி(45). இவரது நண்பர்கள் தாழையூத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தங்கதுரை(28), செல்வம்(26). இவர்கள் 4 பேரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு தனியார் விடுதியில் 4 பேரும் தங்கிய நிலையில் அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை யில் பணத்திற்காக மைத்துனர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசனை கொன்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக நாராயண மூர்த்தி போலீசில் கூறியதாவது:-

    முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது. அதில் எனக்கும் தொழில் செய்ய கொஞ்சம் பணம் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். இதற்காக எனது நண்பர்கள் 2 பேரிடமும் பேசினேன். அவர்கள் போட்டு கொடுத்த திட்டத்தின்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நெல்லையில் ஒரு தனியார் விடுதிக்கு இதேபோல் சென்றோம். ஆனால் அங்கு வைத்து அவரை கொலை செய்ய முடியவில்லை.

    இதனால் 2-வது முறையாக திட்டம் தீட்டி குற்றாலத்திற்கு அழைத்து வந்து கொலை செய்தோம். செல்வம் கொலை செய்ததாக கூறிவிட்டு நாங்கள் தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாராயணமூர்த்தி கூறிய அனைத்தையும் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது.
    • விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    உடுமலை,

    உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்ற ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும் மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி,உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வர சாமி, உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன்,தாசில்தார் கண்ணாமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உடன் இருந்தனர்.

    • மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.
    • விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அரசு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 4000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதாகவும் மேலும் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் .

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் கூறினார்.
    • கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தற்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வந்து தங்கி இருந்து நேர்த்திகளை செலுத்தி விட்டு செல்கின்ற னர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதி களில் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் பணம் வசூல் செய்து வருவதாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதி களுக்கு சென்று அங்குள்ள பதிவு புத்தகத்தை எடுத்து சோதனை செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், அப்போது வாடகை கட்டண பட்டி யலை தங்கும் விடுதிகளில் பயணிகளின் பார்வைக்கு தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும். முறையான பணம் வாங்கிய பிறகு பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதல் பணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளி யூர் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து வரக் கூடிய யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகளை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதி யின் உரிமம் ரத்து செய்யப் படும் என்றார்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×