search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத காத்திருப்போர் தங்கும் விடுதி
    X

    பயன்பாட்டுக்கு வராத காத்திருப்போர் தங்கும் விடுதி.

    பல்லடம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத காத்திருப்போர் தங்கும் விடுதி

    கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×