search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பிக்கலாம்"

    • கலெக்டர் தகவல்
    • நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 33 உதவியாளர்,எழுத்தர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது.

    இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நவம்பர் 10-ந் தேதிஅன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதா ரர்களிடமிருந்து விண்ணப்ப ங்கள் https://drbrpt.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதியன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24-ந் தேதிஅன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும்.

    இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். முற்பட்ட வகுப்பி னருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://drbrpt.in) வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • 29-ந்தேதி கடைசி
    • கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் அரசாணைபடி ஆண்டு தோறும் ஆதிதிராவிட மக் களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவ ருக்கு அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2023-24-ம் நிதி ஆண்டிற்கான அம்பேத்க ரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத் திற்கு அரிய தொண்டு செய்ப வருக்கு 2024-ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டுகள் செய்தவர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதுக் கான விண்ணப்பத்தை குமரி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் பெற்று 29-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் வாரிய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்க படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2582 பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் 07.01.2024 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி TET PAPER-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது பிரிவி னருக்கு அதிக பட்சமாக 53 வயதும், மற்ற பிரிவினருக்கு 58 ஆகவும் இருக்கும்.

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.600 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இதற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்ப முள்ளவர்கள் https://forms.gle/vXF8VpohQTKp8c4v9 என்ற இணைப்பினை பயன்படுத்தி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள நேரடி அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் https://t.me/vnrstudycircle என்ற TELEGRAM CHANNEL வாயிலாக அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (18-ந் தேதி) தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, 04567-230160, 7867080168 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது ஏழை, எளிய பொது மக்களுக்காக எண்ணற்றத் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகி ன்றன. அந்தவகையில் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப பெண்களுக்கு முன்வைப்பு தொகை இன்றி, எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு உள்ளி ட்டவைகள் விலை யின்றி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் அருகிலுள்ள எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் பொது மக்களிடையே இத்திட்டம் தொடர்பாக விழிப்பு ணர்வை ஏற்படு த்திடவும், பயனாளிகள் சேர்க்கை விவரம் குறித்து அறிக்கை யினை வாரந்தோ றும் சமர்ப்பித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தொழிலாளர்கள் தாங்களாகவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்க ளின் கீழ் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் 370 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பொதுசேவை மையங்களி லும், இ-சேவை மையங்க ளிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தாங்களா கவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    கட்டுமான தொழிலா ளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை தாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியா பாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ேதாட்ட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போன்ற வர்களின் விவரங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

    இதில் 16 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் வேலை காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ புலம் ெபயர்ந்தாலும் அர சின் சலுகைகளை பெற இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது வரை சிவகங்கை மாவட்டத் தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 88 அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலா ளர்களின் 31.3.2022-க்கு முன்பாக விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.3.2022-க்குள் விபத்தி னால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தா லோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்லுயிர் காப்பக திட்டத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தொண்டு நிறுவனங்கள் இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வள்ளலார் பல்லுயிர் காப்பகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, மருத்துவச் செலவுகள் மேற்கொள்வது, கூடுதல் பட்டிகள் அமைப்பது, கருத்தடை அறுவை சிகிச்சை பணி மேற் கொள்வது, அறுவை சிகிச்சை கூடங்கள் கட்டுவது, தடுப்பூசி பணி மேற் கொள்வது மற்றும் அவசர சிகிச்சை ஊர்தி வாங்குவது போன்ற சேவைகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது.

    இத்திட்டத்தில், பயனாளியாக சேர விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், 571, அண்ணா சாலை, கால்நடை மருத்துவ மனை வளாகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகள், பராம ரிப்பு செலவின பதிவேடுகள், பராமரிக்கப்படும் விலங்கினங்கள் விபரம் குறித்த ஆவணங்களை இணைத்து முறையான படிவத்தில் விடுபாடின்றி பூர்த்தி செய்து விண்ணப்பபிக்க வேண்டும்.

    பின்னர் சென்னையில் இருந்து கண்காணிப்பு அலுவலர் காப்பகத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன் பின் நிதி விடுவிப்பு செய்யப்படும். எனவே விலங்கின காப்பகங்கள் நடத்தி வருபவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதனை கரு த்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
    • 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-10-2023 முதல் 31-12-2023 வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான ந டவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30-9-2023 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-12-2023 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30-9-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

    பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்களுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.

    தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெற வேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    1972-ம் ஆண்டு தமிழ் நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் மற்றும் தோட்ட நிறுவ னங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங் களில் பணிபுரியும் தொழி லாளர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறு வனத்தின் பங்காக ஒவ் வொரு தொழி லாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழி லாளர் களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரிய த்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2024-க்குள் செலுத்த வேண்டும்.

    அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழி லாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங் களுக்கு தொழி லாளர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay+ DA) ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும்.

    விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்யப்பட்ட விண்ணப் பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்து உள்ளார்.

    • டிச.15 கடைசி நாள்
    • கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசா யிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகா க்கவும் பண்ணை வருவா யை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழி ல்நுட்பங்களை கடை பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2023-ம் ஆண்டில் கன்னியா குமரி மாவட்ட கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விதைக்க இயலா மை மற்றும் விதைப்பு பொய்த்து போகும் பயிர்க ளுக்கு காப்பீடு செய்திட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில், கன்னி யாகுமரி மாவட்டத்தில் 11 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்ட த்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூ ரன்ஸ் கம்பெனி லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் காமன் சர்வீஸ் சென்டர் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15, 2023 ஆகும்.

    எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசா யிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலு த்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட் டுக் கொள்ளப்படு கிறார்கள். பயிர் காப்பீட்டு த்தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொ ழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண த்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும், பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவி க்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது என்பதால் விவசாயிகள் கும்பப்பூ பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்துகொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • புதுக்கோட்டை மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

    பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். 

    • கலெக்டர் தகவல்
    • தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் ஆர்வலர் களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் 'தமிழ்ச் செம்மல்' விருதும், விருதாளர்கள் ஒவ்வொரு வருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமி ருந்து 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www. tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவ ரக்குறிப்பு, நூல்கள் அல்லது கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந் தால் அது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி மாவட்டத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 5-10-2023-ம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 'தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில். (தொலை பேசி எண். 04652-234508 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலை பேசி வாயிலாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    ×