search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள்
    X

    திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள்

    • திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
    • இதில் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, வேளாண்மை, ஆடை, வாகனம், அழகு மற்றும் ஆரோக்கியம், உணவு பதப்படுத்தும் முறை, தளவாடங்கள் மற்றும் பொருத்துதல், கற்கள் மற்றும் நகைகள், பசுமை வேலை, சுகாதார பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், உள்கட்டமைப்பு உபகரணங்கள், கருவியாக்கம், ஐ.டி., வாழ்க்கை அறிவியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், வண்ணப்பூச்சுகள் மற்றும் பூச்சு, பிளம்பிங், சில்லறை விற்பனை, ரப்பர், விளையாட்டு, தொலை தொடர்பு மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளால் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை வருகிற 20-ந் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0452-2308216-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×