search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply for"

    • முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    தமிழக அரசு துறைகளில் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த அலுவலர், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.

    தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழு கூட்டம் மூலம் பரிசீலனை செய்து இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வருகின்ற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6-வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.

    இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 தொடர்பான அறிவிப்பு கடந்த 3-ந் தேதி வெளி யிட்டுள்ளது.

    ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்ச கங்கள், துறைகள், நிறுவ னங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பா யங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்து ள்ளது.

    இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்க லாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு ள்ளது.

    மேலும் விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

    இப்பணிக் காலி இடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக அடுத்த மாதம் 3-ந் தேதி வரை விண்ண ப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்து வத ற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ந் தேதி ஆகும்.

    தென் மண்ட லத்தில் கணினி அடி ப்படை யிலான தேர்வு ஜூலை மாதம் ஆந்திரா மாநி லத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரி யில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலு ங்கானா மாநிலத்தில் 3 மையங்க ளிலும் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

    இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளது.

    மேலும் இந்த இணைய தளம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொ ளிகளை கண்டு பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைய லாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படு–வர். அரசு அறிவித்தபடி மாதம் ரூ.27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் (சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளமுகாமைத்துவம்) பெற்றிருக்க வேண்டும்.

    40 வயதுக்கு உட்பட்டோர் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6-வது மாடி, ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தேவாலய சீரமைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடங்களில் செயல்படும் தேவாலயம் சீரமைக்க அரசு சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் தேவாலயங்களை பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடங்களில் செயல்படும் தேவாலயம் சீரமைக்க அரசு சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். தேவாலயம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சமும், தேவாலயம் 20 ஆண்டுக்கும் அதிகமாக இருப்பின் அதற்கு ரூ.3 லட்சமும் நிதியுதவி அளிக்கப்படும்.

    சீரமைப்புக்கான நிதி கோரும் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்படும்.

    நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×