முதல்வரின் சிறந்த செயல்பாடு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதல்வரின் சிறந்த செயல்பாடு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

ஈரோடு:

தமிழக அரசு துறைகளில் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த அலுவலர், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழு கூட்டம் மூலம் பரிசீலனை செய்து இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வருகின்ற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6-வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.

இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com