search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    • ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படு–வர். அரசு அறிவித்தபடி மாதம் ரூ.27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் (சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளமுகாமைத்துவம்) பெற்றிருக்க வேண்டும்.

    40 வயதுக்கு உட்பட்டோர் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6-வது மாடி, ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×