search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின்கட்கரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். 


    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    • நான்கு அல்லது ஆறு வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்படும்.
    • சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெற முடிவு.

     மும்பை:

    மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த நெடுஞ் சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 13 ஆண்டுகளுக்குப் பின் செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும். 


    இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்து விடும். டெல்லியில் இருந்து ஜெய்பூர் இடையே 2 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், செல்லும் வகையில் பசுமை விரைவு நெடுஞ்சாலை பணிள் நடைபெறுகின்றன. டெல்லி-ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும், டெல்லி -மும்பை இடையே 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுக்கும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த சாலைத் திட்டம் 4 பகுதிகளாக கட்டப்படுகிறது.
    • சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும்.

    சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் 2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    • மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறையும்.
    • மக்கள் குறைவான கட்டணத்தில் வசதியான பயணத்தை விரும்புகின்றனர்.

    பசுமை மற்றும் தூய்மைப் போக்குவரத்து குறித்து டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சிறப்புரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி, தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    பொதுத்துறை மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் மின்சார வாகன பொதுப் போக்குவரத்து அமைப்பை, தொழில்ரீதியாக செயல்படுத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது போன்று லண்டனில் செயல்படும் போக்குவரத்து முறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மக்கள் குறைவான கட்டணத்தில் அதிக வசதியான பயணத்தை விரும்புவதாக அவர் கூறினார். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யவும், பயணத்தை எளிதாக்கவும், கைகளால் பயணச்சீட்டு தரும் முறைக்கு பதிலாக, அட்டை அல்லது க்யூஆர் குறியீடு முறையிலான பயணச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

    மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறைவதுடன், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் அவர் தெரிவித்தார். 15 லட்சம் கோடியில் ஆட்டோமொபைல் துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும், இது 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

    பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மாற்று எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உள்ளது.
    • அடுத்த கட்ட இணை உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள் கவனம் செலுத்துவது அவசியம்.

    மும்பை:

    மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது:

    இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது. சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்

    எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்ட இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்.

    சர்க்கரையை குறைந்த அளவுக்கு உற்பத்தி செய்வதுடன், எத்தனால் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை, தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இது போன்று செய்தால், விவசாயிகள் உணவுப் பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும்.

    பலவகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை இந்த வகை என்ஜின்களை உற்பத்தி செய்து வருகின்றன, பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகிறது.
    • அமெரிக்க தரத்திற்கு, இந்திய சாலை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

    மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்.

    இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.

    ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
    • மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது.

    மும்பை:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின்கட்கரி மும்பையில் நேற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

    மாநகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 


    மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளதாகவும், மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் 35 சதவீத காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

    மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

    ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது என்றாலும் சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது என்றும் மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

    • பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் ஒரு லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும்.
    • மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக எத்தனால் இருக்கும்.

    மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது:

    டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மும்பையை, டெல்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருகிறது.

    ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். பெட்ரோலுக்கு இணையான கலோரி ஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளது. ஃப்ளெக்ஸ் வகை எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

    பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும், மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த தேசிய நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும்.
    • போக்குவரத்து நேரம் குறைவதுடன், விபத்துக்கள் தடுக்கப்படும்.

    நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்கிறது. இணைப்பின் வாயிலாக செழிப்பு என்ற யுகத்தை நோக்கி புதிய இந்தியாவை மோடி அரசு வழி நடத்திச் செல்கிறது.

    இத்திட்டத்தின் கீழ் கோவா, கர்நாடகா எல்லைப்பகுதியிலிருந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை எண்17-லில் உள்ள குந்தப்பூர் வரை 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதாவது 92.42 சதவீதம் அளவிற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் டிசம்பர் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

    மொத்தமுள்ள 187 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பகுதியில் ஒரு புறம் அரபிக்கடல் கடற்கரையோரமும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் அமைந்துள்ளது.

    அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ள இந்த கடற்கரையோர நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும். இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும், விபத்துக்கள் தடுக்கப்படும், எரி்பொருள் சேமிக்கப்படும்.

    தமிழகத்தின் கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மங்களூர், உடுப்பி, பனாஜி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து பயணிகளுக்கு உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்பு அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

    புதிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பன்மடங்கு வாய்ப்புகளுடன், திட்டம் அமையவுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை வழங்க இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு முயற்சி உதவுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கியிருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாகனங்கள் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்கிறது.
    • இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை இது ஊக்குவிக்கும்.

    பாரத்-என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, ஒப்புதல் அளித்துள்ளார்.

    பாரத்-என்சிஏபி திட்டம், இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்யலாம். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும்.

    இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்திற்கு பாரத் என்சிஏபி திட்டம் முக்கிய கருவியாக இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய வாகனத்துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ×