search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்- மத்திய மந்திரி நிதின் கட்கரி
    X

     நிதின் கட்கரி

    இந்திய உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்- மத்திய மந்திரி நிதின் கட்கரி

    • பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகிறது.
    • அமெரிக்க தரத்திற்கு, இந்திய சாலை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

    மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்.

    இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.

    ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×