search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu Market"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் “பொங்கல் சிறப்பு சந்தை” அமைக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் "பொங்கல் சிறப்பு சந்தை" அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கு இன்று அதிகாலையில் ஏராளமான வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

    இதனால் கோயம்பேடு சிறப்பு சந்தையில் இன்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. தொடர்ந்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 150 லாரி களில் கரும்பு விற்பனைக்கு குவிந்த நிலையில், இன்று மேலும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு கட்டுகள் குவிந்ததால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. கும்மிடிப் பூண்டி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வாக னங்களில் மஞ்சள் கொத்து கள் குவிந்ததால் நேற்று ரூ.80 வரை விற்கப்பட்ட மஞ்சள் கொத்து கட்டு இன்று ரூ.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மிச்சாங் புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக இஞ்சி கொத்துகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான இஞ்சி கொத்துகள் மட்டுமே கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது இதையடுத்து நேற்று ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.

    மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

    15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,

    இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.

    இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

    நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
    • கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. நள்ளிரவில் வழக்கம் போல் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் மந்தமாகி போனது.

    இதனால் கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.

    மொத்த விற்பனை விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, பீன்ஸ்-ரூ.25, அவரைக்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.50, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்தரிக்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, கோவக்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.12, புடலங்காய்-ரூ.25, ஊட்டி கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, சுரக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, நூக்கல்-ரூ.25, இஞ்சி-ரூ.100.

    • கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது.
    • பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    வெங்காயம்-ரூ.28, தக்காளி-ரூ.20, உருளைகிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.35, பீட்ரூட்ரூ.45, முட்டைகோஸ்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.50, காராமணி-ரூ.50, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40.

    • இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு திருவள்ளூர், ஓசூர், சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா, கர்னூல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது. இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது. பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    நாளை வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மல்லி ஒரு கிலோ ரூ.1800-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், முல்லை-ரூ.900, சாக்லேட் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ்-ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.60 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து பூவியாபாரிகள் கூறும்போது, நாளை வைகுண்ட ஏகாதசி, வருகிற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    • பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
    • பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.

    போரூர்:

    மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.

    இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
    • 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளையொட்டி இன்று மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் நேற்று மாலை முதலே கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பூ விற்பனை விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்ற நிலையில் இன்று அதன் விலை ரூ.1,500ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சாமந்தி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 50 வாகனங்கள் மூலம் பூ விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது' என்றார்.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவில் வருமாறு :-

    மல்லி-ரூ.1,500, ஜாதி- ரூ.500, முல்லை- ரூ.900, கனகாம்பரம்- ரூ.1,000, சாமந்தி- ரூ.180, பன்னீர் ரோஜா- ரூ.120 சாக்லேட் ரோஜா- ரூ.160, அரளி- ரூ.200 முதல் ரூ.400வரை, சம்பங்கி- ரூ.200.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மழை பாதிப்பு காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து வெகுவாக குறைந்து போனது.

    இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது. பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.80 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு-ரூ.50, கத்தரிக்காய்-ரூ.60, கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.50, முட்டைகோஸ்-ரூ.25, பாகற்காய்-ரூ.70, முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது.

    இதேபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், சின்னவெங்காயம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை.
    • கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ, மளிகை என சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. மார்க்கெட்டின் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பில் குளிர்பதன கிடங்கு உள்ளது. விற்பனை ஆகாமல் தேக்கமடையும் காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுத்திடும் வகையில் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தில் அவற்றை இந்த கிடங்கில் தேக்கி வைத்து வந்தனர். ஆனால் இந்த குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை. இதனால் வியாபாரிகள் பலர் சொந்தமாக குளிர்பதன கிடங்கு அமைத்தும் தனியார் குளிர்பதன கிடங்குகள் மூலமும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கை நவீன முறையில் சீரமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மார்க்கெட்டில் கழிவுகளை அகற்றுவது, சுகாதாரம், குடிநீர், மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐ.ஐ.டி. மூலம் விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளன. எனவே விரைவில் இதற்கான பணிகள் முடிந்து குளிர்சாதன கிடங்கு செயல்பாட்டுக்கு வரஉள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 4 இடங்களில் போர்வெல் அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து மார்க்கெட் வளாகம் முழுவதும் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரி யத்திற்கு வரி செலுத்தாத காரணத்தால் மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ குடிநீர் சப்ளை ஏற்கனவே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×