search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் விற்பனை"

    • பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் “பொங்கல் சிறப்பு சந்தை” அமைக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் "பொங்கல் சிறப்பு சந்தை" அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கு இன்று அதிகாலையில் ஏராளமான வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

    இதனால் கோயம்பேடு சிறப்பு சந்தையில் இன்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. தொடர்ந்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 150 லாரி களில் கரும்பு விற்பனைக்கு குவிந்த நிலையில், இன்று மேலும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு கட்டுகள் குவிந்ததால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. கும்மிடிப் பூண்டி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வாக னங்களில் மஞ்சள் கொத்து கள் குவிந்ததால் நேற்று ரூ.80 வரை விற்கப்பட்ட மஞ்சள் கொத்து கட்டு இன்று ரூ.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மிச்சாங் புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக இஞ்சி கொத்துகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான இஞ்சி கொத்துகள் மட்டுமே கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது இதையடுத்து நேற்று ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது.

    • இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
    • மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகரா ட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    ×