search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விறுவிறுப்பு"

    • இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
    • மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகரா ட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
    • மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு தமிழ்நா ட்டின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும், கேரளா கர்நாடகா, ஆந்திரா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்கின்றனர்.

    மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விசேஷ நாட்கள் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் கோவில்களில் அடுத்தடுத்து விசேஷங்கள் வருகின்றன.இதேபோல் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பாவாடை, நைட்டி, சர்ட், வேட்டி சட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சில்லறை வியாபாரம் சற்று மந்தமாக நடந்தது.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் இருந்து தீபாவளி விற்பனை களை கட்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
    • சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கி ழமைகளில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வார்கள். கடந்த சில வாரங்களாக வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.

    ஓணம் பண்டிகையையொட்டி இன்று ஏராளமான கேரளா வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக மற்ற வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே இருந்தது. இன்று நடந்த சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த வாரம் ஓணம் பண்டிகை நெருங்க உள்ளதால் வியாபாரம் களைக்கட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    ×