search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பு
    X

    ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பு

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
    • மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு தமிழ்நா ட்டின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும், கேரளா கர்நாடகா, ஆந்திரா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்கின்றனர்.

    மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விசேஷ நாட்கள் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் கோவில்களில் அடுத்தடுத்து விசேஷங்கள் வருகின்றன.இதேபோல் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பாவாடை, நைட்டி, சர்ட், வேட்டி சட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சில்லறை வியாபாரம் சற்று மந்தமாக நடந்தது.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் இருந்து தீபாவளி விற்பனை களை கட்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×