search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள்"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை புரட்டுப்போட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கின்றன.

    நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்ற கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை தற்போது சூரியன் சற்று எட்டிப்பார்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேங்கிய மழைநீரை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும், கடைகள் திறக்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ஒன்றிரண்டு டீக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும், பிஸ்கட் போன்ற எந்த பொருட்களும் இல்லை. போதுமான பால் கையிருப்பு இல்லை என டீ மற்றும் காபியை பார்சலில் கட்டிக் கொடுக்க மறுக்கின்றனர்.

    தற்போது பிரதான சாலைகளில் மழை நீர் மெல்லமெல்ல வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால், உட்புற சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி குளம்போல்தான் காட்சியளிக்கின்றன.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளதை தொ டர்ந்து எனது தலைமையில் (மணிகண்ட பிரபு) தொழிலா ளர் உதவி ஆய்வாளர்களால் டெக்ஸ்டைல்ஸ், ஆயத்த ஆடைகள் மற்றும் இனிப்பு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் இரட்டை விலை குறித்து சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.

    முத்திரை இடப்படாத, தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.
    • கடைகள் இடிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் விளம்பர போர்டுகள் வைத்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • மன்னார்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன.

    இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    • மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகளை அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுபானக்கூடங்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட நாட்களில் மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது 

    • குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
    • உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 10 வேகன்களில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

    • பிஸ்கட் விற்பனை செய்த வகையில் ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் மிரட்டி உள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திராநகரை சேர்ந்தவர் ராகினி (வயது 26).

    இவர் சொந்தமாக பிஸ்கட் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக விற்பனையாளராக தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த தேவேந்திரன்(42) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் தேவேந்திரன் கடைகளில் பிஸ்கட் விற்பனை செய்த வகையில் அதன் மூலம் வசூலான ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து ராகினி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்தனர்.

    • நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.

    • சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    11 லட்சம் குடும்ப அட்டைகள்

    முதல்-அமைச்சர் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,258 முழு நேர ரேசன் கடைகள் மற்றும் 456 பகுதி நேர ரேசன் கடைகள் மொத்தம் 1,714 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடைகளில் சுமார் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வருகிறார்கள்.

    அந்தவகையில் மாதந்தோறும் அரிசி 17,747 மெ.டன், சர்க்கரை -1,383 மெ.டன். கோதுமை 285 மெ.டன். துவரம் பருப்பு-763 மெ.டன், பாமாயில்-851 மெ.டன் என ஆக மொத்தம் 21,029 மெ.டன் குடிமைப் பொருட்கள் சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் குடிமைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்குகளிலிருந்து கூட்டுறவுத் துறையின் முதன்மைச் சங்கங்கள் மற்றும் சுய எடுப்புச் சங்கங்கள் மூலமாக ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரிசியினை அன்றாடம் மாதிரி சேகரித்து அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு தர கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுத் துறை ஆய்வு அலுவலர்கள், முதன்மைச் சங்கங்களின் நகர்வு பணியாளர்கள் ஆகியோரால் தரம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தரமான அரிசியினை மட்டுமே ரேசன் கடைகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளில் 102 முழுநேரம் மற்றும் 11 பகுதிநேரம் ஆக மொத்தம் 113 ரேசன் கடைகள் புதியதாக ெதாடங்கப்பட்டுள்ளது. இந்த ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

    • காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.
    • ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.

    காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

    இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
    • மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை நகரத்தின் மைய பகுதியில் உள்ள பெரியமார்க்கெட் என அழைக்கப்படும் குபேர் அங்காடி புதிதாக கட்டப்பட உள்ளது.

    50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெரியமார்க்கெட்டில் இட நெருக்கடி இருந்து வந்த நிலையில், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அதை நவீனமுறையில் புதிதாக கட்ட அரசு தீர்மானித்துள்ளது.

    இதனால் பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.

    இதற்கு பெரியமார்க்கெட்டில் உள்ள நிரந்தர மற்றும் அடிக்காசு, மீன் அங்காடி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடைகளை காலி செய்யாமல், தேவையான சீரமைப்பு பணிகளை பகுதி, பகுதியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் 4 மணி நேரம் கடைகளை அடைத்து பெரியமார்க்கெட் அனைத்து வியபாரிகளும் ஒன்றிணைந்து சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், பெரியமார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெரியமார்க்கெட்டில் உள்ள கடைகளில் நகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    அந்த அறிவிப்பில், புதுவை நகராட்சிக்கு சொந்தமான குபேர் அங்காடியில் வியாபாரம் செய்யும் அனைத்து வகையான வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு அறிவிப்பது என்னவென்றால், தற்போது பழுதான நிலையில் உள்ள குபேர் அங்காடி வளாகத்தை புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட கட்டுமான கழகத்தால் மறுகட்டுமானம் செய்யும் பணி விரைவில் தொடங்க புதுவை அரசு தீர்மானித்துள்ளது.

    அந்த பணி முடிவடைந்தவுடன் தற்போது கடை ஒதுக்கீடு பெறப்பட்ட அனைத்து வகை வியாபாரிகளுக்கும் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு புதிய ககைடள் மறு ஒதுக்கீடு செய்து தரப்படும்.

    ஆகவே விரைவில் தொடங்க உள்ள கட்டுமான பணிக்கு ஏதுவாக தற்போது குபேர் அங்காடியில் இயங்கி வரும் அனைத்து வகை கடைகளும் (மீன் அங்காடி தவிர்த்து) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை ரோடியர் மில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைக்கு மாற்றம் செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இன்று காலை இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காலை 10.30 மணியளவில் பெரியமார்க்கெட் வியாபாரிகள் ஒன்றுகூடி கடைகளை அடைத்து நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் திரண்டனர்.

    இதில் மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

    ஆனால் வியாபாரிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேரு வீதி வழியாக காமராஜர் சிலை சந்திப்புக்கு வந்தனர். அங்கு நாலாபுறமும் சாலை சந்திப்புகளில் அமர்ந்து வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, நேருவீதி சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த சாலைகளின் வழியாக சென்றனர். வியாபாரிகள் சாலையின் மைய பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நகராட்சி அறிவிப்பை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை தொடர்வோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர் இதனால் புதுவை நகரின் மைய பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    ×