search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை திடீர் அதிகரிப்பு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் காய்கறி விலை திடீர் அதிகரிப்பு

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மழை பாதிப்பு காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து வெகுவாக குறைந்து போனது.

    இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளது. பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.80 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு-ரூ.50, கத்தரிக்காய்-ரூ.60, கேரட்-ரூ.60, பீட்ரூட்-ரூ.50, முட்டைகோஸ்-ரூ.25, பாகற்காய்-ரூ.70, முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது.

    இதேபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், சின்னவெங்காயம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சீரான பின்னர் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×