search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காடி நிர்வாகம்"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.
    • தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    சென்னை:

    கோயம்பேடு சந்தைக்கு தினமும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கோயம்பேட்டில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, இந்த சந்தையை திருமழிசை பகுதிக்கு மாற்றி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அறிக்கை தயாராவதாக தகவல்கள் வெளியாகின.

    அவ்வாறு மாற்றியமைக்கும் பட்சத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வணிகர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இதுகுறித்து கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றப்போவதாக வெளியாகியுள்ள தகவல் வெறும் வதந்தி. இதை நம்ப வேண்டாம் என்றனர். கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜி.டி. ராஜசேகரன் கூறும்போது, கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் அங்காடி நிர்வாகத்தினர், வியாபாரிகளுக்கு முறையாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பின்னர் இது குறித்து கருத்துகள் கேட்கப்படும். ஆனால் இதுவரை தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    எனவே கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றப் போவதாக கூறப்படும் வதந்தியை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.

    ×