search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரிய வெங்காயம்"

    • பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
    • பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.

    போரூர்:

    மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.

    இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

    • காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முத்தூர்:

    காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

    நேற்று கூடிய வார சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், தக்காளி கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றமாக உள்ளது. மேலும் வரும் வாரங்களில் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கோயம்பேடு மார்க்கெடுக்கு தினசரி 40 முதல் 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் மழை பாதிப்பு காரணமாக அறுவடை செய்வது தள்ளி போகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

    தற்போது வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ. 34-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை ரூ.54 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 ஆக எகிறி உள்ளது.

    வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் ஓட்டல்களில் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.

    வெங்காயம் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெடுக்கு தினசரி 40 முதல் 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து வருகிறது. இன்று மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் மழை பாதிப்பு காரணமாக அறுவடை செய்வது தள்ளி போகிறது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மார்க்கெட்டுக்கு பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், அவரைக்காய் ரூ80-க்கும் விற்கப்படுகிறது.

    • தக்காளி மட்டுமின்றி பிற காய்கறி விலையும் குறைவாக உள்ளன.
    • இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. தற்போது சில்லரையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. முதல் தரமான தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.42 ஆக உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

    தக்காளி மட்டுமின்றி பிற காய்கறி விலையும் குறைவாக உள்ளன. மொத்த விற்பனையில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.20, உஜாலா கத்தரிக்காய் ரூ.25, வரி கத்தரிக்காய் ரூ.20, அவரை ரூ.40, வெண்டைக்காய் ரூ.10, பாவக்காய் ரூ.30, பீர்க்கன்காய் ரூ.20, புடலங்காய் ரூ.10, சுரக்காய் ரூ.5, பீன்ஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.20, முட்டைகோஸ் ரூ.16 என வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது. இஞ்சி மொத்த விலையில் கிலோ ரூ.220, சில்லரையில் கிலோ ரூ.280 வரை விற்கப்படுகிறது. புது இஞ்சி விலை கிலோ ரூ.80 ஆக உள்ளது.

    தற்போது பெரிய வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.32-ம், 2-வது தரம் கிலோ ரூ.20-க்கும் இன்று விற்கப்பட்டது.

    சில்லரை காய்கறி கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    பெரிய வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகக்கூடிய அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வரும் நாட்களில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனை விலை கிலோ ரூ. 60 முதல் ரூ.70 வரை உயர வாய்ப்பு உள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது.

    ×