search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India"

    • இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
    • ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் யூடியூப் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

    இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு அணிகளும் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    பாகிஸ்தான் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி. குறிப்பாக பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்களுடன் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் மோதினால் நிச்சயம் அது ஆகச்சிறந்த போட்டியாக இருக்கும். அற்புதமான ஒரு தொடராக அமையும். முழுக்க முழுக்க கிரிக்கெட் அடிப்படையில் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது' என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' விதிப்படி ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராக சேர்க்க முடிகிறது. இந்த புதுமையான விதி குறித்து ரோகித் கூறுகையில், 'இம்பேக்ட் விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களின் திறமை மேம்படுவது தடுக்கப்படுவதாக நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாட்டே தவிர, 12 பேர் அல்ல. எனவே இம்பேக்ட் விதி என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக பொழுதுபோக்கை கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை வைத்து பாருங்கள். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் இம்பேக்ட் விதியால் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    மேலும், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம்ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் இரண்டு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஐ.பி.எல்-ல் இப்போதே 4 தடவை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு விட்டன என்றால், இந்தி விதிமுறையின் தாக்கத்தை கவனியுங்கள். அது மட்டுமின்றி கூடுதலாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் இறங்கும் போது, உங்களது வழக்கமான 6-வது அல்லது 7-வது வரிசை பேட்ஸ்மேன்கள் 7-8 பந்துகளை சந்திக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணித் தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நான் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

    • மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

    மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
    • அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.

    ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. 

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது.
    • அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா்.

    இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    'பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டாா். அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ளன. ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை. இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

    அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது. ராணுவ உளவுப் பகிா்வு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. அதேசமயம், ரஷியாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்கிறது. இது அமெரிக்கா-இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது.

    அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சாா்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

    நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குகிறது. நமது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

    அமெரிக்காவில் தொழில்முனைவோா்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள். அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனா்.

    இவ்வாறு பிராட்செர்மன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கனடா பிரதமர் ஒரு குழு அமைத்தார்.
    • கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரியவந்தது.

    டொரன்டோ:

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்தது.

    கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) 2021-ம் ஆண்டின் தேர்தலின்போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்துள்ளது. தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.

    இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    இதற்கிடையே, தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழுவை அமைத்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது.

    மூத்த அதிகாரிகள் குழுவிடம் வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

    • பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
    • திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த 20 பயங்கரவாதிகள் படுகொலைகளுக்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தான் காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியானது.

    காலிஸ்தான் இயக்கத்தில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை குறி வைத்து வெளிநாட்டு மண்ணில் இந்த படுகொலைகளை இந்திய உளவுத்துறையின் சிலீப்பர் செல்கள் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது. இது திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம் என தெரிவித்துள்ளது.

    • ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை இந்த பரிசோதனை நடந்ததாகவும், பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை ராணுவ தளபதி அனில் சவுகான் உள்பட பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரிகளும், டிஆர்டிஓ அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

    'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். 

    • பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
    • கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை குறிக்கும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் கால நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் 'சூப்பர் எல் நினோ' என்று அழைக்கப்படும்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே சூப்பர் எல் நினோ ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக எல் நினோ தாக்கம் ஏற்படும்போது இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சூப்பர் எல் நினோவின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நாளை நடைபெறும் பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

    மேலும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி நாளை டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசு முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.

    இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தனிநபர் சார்ந்த பேரணி அல்ல. இது ஒரு கட்சியின் பேரணி அல்ல. 28 கட்சிகள் ஈடுபடுவது தொடர்பானது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து அங்கத்தினரும் கலந்து கொள்வார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதற்கான செய்தியை இது வெளிப்படுத்தும். இந்த பேரணி ஒரு நபரை பாதுகாப்பதற்கானது அல்ல, அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக" என்றார்.

    இந்த பேரணியில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரண், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ'பிரனை் உள்ளிட்ட தலைவரக்ள் இந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    • விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண கவர்னர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    ×