என் மலர்
நீங்கள் தேடியது "US government"
- இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
- அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம், எந்த மாற்றமும் இல்லாமல் 43வது நாளாக இன்று வரை தொடர்ந்தது.
இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். 670,000 பேர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை கூட அணுக முடியவில்லை.
அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அமெரிக்காவில் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 4.6 சதவீதமாக இருந்த சராசரி வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டிரம்பின் பிடிவாதமே இந்த பணிநிறுத்தம் தொடரக் காரணம் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.

இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது .
மசோதாவுக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும், எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆறு ஜனநாயகக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்தனர்.
இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டு, பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.
இந்த நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது.
இருப்பினும், விமான சேவைகள் உட்பட அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆகும்.
முன்னதாக பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அமைப்பான காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடப்பட்டது.
1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
- தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்
நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.
இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.
இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
- நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.
அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி எல்லையில் சுவர் எழுப்ப மெக்சிகோவிடம் டிரம்ப் நிதி கேட்டார். ஆனால் அந்த நாடு தர மறுத்துவிட்டதால் உள்நாட்டு நிதியை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி உருவானது. இதற்காக உள்நாட்டு நிதி 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க பாராளுமன்றத்தை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறும் ஜனநாயக கட்சி, செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகள் முடங்கின.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை கூடியது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும் உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசு துறைகள் முடங்கியதை சரி செய்வதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் இரு சபைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு துறைகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.
அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்கிற தனது முடிவில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். இதனால் அரசு துறைகளின் செயலிழப்பு புத்தாண்டு வரை தொடரும் நிலை உருவாகி உள்ளது.
இந்த குழப்பமான சூழலால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. #USGovernmentShutdown #Trump






