search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாஸிற்கு பைடன் அரசு மறைமுகமாக உதவியதாக டிரம்ப் குற்றச்சாட்டு
    X

    ஹமாஸிற்கு பைடன் அரசு மறைமுகமாக உதவியதாக டிரம்ப் குற்றச்சாட்டு

    • ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
    • தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்

    நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.

    சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.

    இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    டிரம்ப் கூறியிருப்பதாவது:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.

    இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.

    Next Story
    ×