search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல் விபத்து"

    • சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது.
    • இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தின் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர். விபத்தில் இந்திய குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பலில் இருக்கும் இந்திய குழு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    எனினும், விபத்து சமயத்தில் பால்டிமோர் மேம்பாலத்தில் பணியாற்றி வந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மேம்பாலத்தில் ஏற்பட்ட குழிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    "இதுவரை நடைபெற்ற தேடுதல் முயற்சி, இங்குள்ள கடல்நீரின் வெப்பநிலை மற்றும் பல்வேறு காரணங்களை வைத்து பார்க்கும் போது, விபத்தில் சிக்கியவர்களை இனியும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை," என்று அமெரிக்க கடலோர காவல்படையை சேர்ந்த ஷானன் கிலரீத் தெரிவித்துள்ளார்.

    "பால்டிமோரின் ஸ்காட் கீ மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தை +1-202-717-1996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது.

    • விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண கவர்னர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • பாலத்தில் 20 டன் சுமை வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது
    • சம்பவம் குறித்து அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்

    சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரம், குவாங்சோ (Guangzhou). முக்கிய துறைமுக நகரமான இது, பெர்ல் நதியின் (Pearl River) டெல்டா பகுதியில் உள்ளது.

    2004ல் குவாங்சோ பகுதியில் நான்ஷா (Nansha) மாவட்டத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தளம் ஒன்று உருவானது.

    2021லேயே அங்குள்ள லிக்சின்சா (Lixinsha) பாலத்தில் கப்பல்கள் மோதாத வண்ணம் சீரமைக்க அப்பிராந்திய அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால், சீரமைக்கும் பணிகள் பல காரணங்களுக்காக அது தள்ளி போடப்பட்டு வந்தன.

    2020ல், 20 டன் வரை எடையுள்ள சுமையுடன் அந்த பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போசான் (Foshan) பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி சென்ற ஒரு கப்பல், அந்த பாலத்தின் கீழே செல்லும் போது எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது.


    இதில் அப்பாலத்திலிருந்து ஒரு பேருந்து உட்பட 5 வாகனங்கள் தண்ணீரில் விழுந்தன.

    இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.

    இந்த மோதலால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே அந்த கப்பல் கீழே சிக்கிக் கொண்டது.

    விபத்தில் சிக்கிய அந்த கப்பலில் சரக்கு ஏதும் கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் தொடர்பாக, அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    கப்பலை பாலத்தின் கீழிருந்து வெளியே மீட்கும் பணி மும்முரப்படுத்துள்ளது. இதனால், விபத்து நடந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர்.

    துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர்.

    இந்த கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 16 பேர் உயிரிழந்த நிலையில் 44 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பேர் மீட்கப்பட்டனர். இதில் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    • சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது
    • அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டோக்கியோ:

    ஜப்பானின் தென்மேற்கு கடற்பகுதியில் ரசாயன டேங்கர் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து இன்று அதிகாலையில் நடந்துள்ளது என்று குஷிமோட்டோ கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

    டேங்கர் கப்பலில் ஆறு ஜப்பானிய பணியாளர்களும், சரக்கு கப்பலில் 14 சீன பணியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்ததாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் குஷிமோட்டோ கடலோர கவல் படையினர் கூறினார்கள்.

    இரண்டு கப்பல்களும் வாகாயமா மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்தபோது, டேங்கர் கப்பலில் எந்த ரசாயனமும் ஏற்றப்படவில்லை. எனவே, மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஜிபிஎஸ் பதிவுகள் ஆராயப்படுகின்றன. டேங்கர் கப்பல் தங்கள் கப்பலை நோக்கி திடீரென பாய்ந்து வந்ததாக சரக்கு கப்பல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

    • ஹாங்காங்கின் தெற்கே 300 கிமீ தொலைவில் வெப்பமண்டல புயலில் கப்பல் சிக்கி மூழ்கத் தொடங்கியது
    • கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படத்தை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது.

    தென் சீனக் கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது. சுமார் 30 ஊழியர்களுடன் சென்றுகொண்டிருந்த அந்த கப்பல், ஹாங்காங்கின் தெற்கே 300 கிமீ தொலைவில் வெப்பமண்டல புயலில் சிக்கியது. இதனால் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறது.

    தகவல் அறிந்த கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் சிக்கியிருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணி கடும் சவாலாக இருக்கிறது. இன்று காலை வரை மூன்று நபர்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படத்தை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக உடைந்து மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை கடுமையான அலை தாக்குவதும், ஒரு ஊழியர் மீட்பு ஹெலிகாப்டரில் ஏற்றுவதும் அந்த புகைப்படங்களில் உள்ளது.

    கப்பல் மூழ்கும் காட்சி மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×