search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guangzhou"

    • பாலத்தில் 20 டன் சுமை வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது
    • சம்பவம் குறித்து அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்

    சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரம், குவாங்சோ (Guangzhou). முக்கிய துறைமுக நகரமான இது, பெர்ல் நதியின் (Pearl River) டெல்டா பகுதியில் உள்ளது.

    2004ல் குவாங்சோ பகுதியில் நான்ஷா (Nansha) மாவட்டத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தளம் ஒன்று உருவானது.

    2021லேயே அங்குள்ள லிக்சின்சா (Lixinsha) பாலத்தில் கப்பல்கள் மோதாத வண்ணம் சீரமைக்க அப்பிராந்திய அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால், சீரமைக்கும் பணிகள் பல காரணங்களுக்காக அது தள்ளி போடப்பட்டு வந்தன.

    2020ல், 20 டன் வரை எடையுள்ள சுமையுடன் அந்த பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போசான் (Foshan) பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி சென்ற ஒரு கப்பல், அந்த பாலத்தின் கீழே செல்லும் போது எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது.


    இதில் அப்பாலத்திலிருந்து ஒரு பேருந்து உட்பட 5 வாகனங்கள் தண்ணீரில் விழுந்தன.

    இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.

    இந்த மோதலால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே அந்த கப்பல் கீழே சிக்கிக் கொண்டது.

    விபத்தில் சிக்கிய அந்த கப்பலில் சரக்கு ஏதும் கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் தொடர்பாக, அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    கப்பலை பாலத்தின் கீழிருந்து வெளியே மீட்கும் பணி மும்முரப்படுத்துள்ளது. இதனால், விபத்து நடந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. #BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறுவதற்கு சிந்து கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.

    இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை சந்திக்கிறார்.#BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    ×