search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Container Ship"

    • பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
    • நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆற்றில் உள்ள இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில் அப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் கவுதமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது.
    • இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தின் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கினர். விபத்தில் இந்திய குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பலில் இருக்கும் இந்திய குழு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    எனினும், விபத்து சமயத்தில் பால்டிமோர் மேம்பாலத்தில் பணியாற்றி வந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மேம்பாலத்தில் ஏற்பட்ட குழிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    "இதுவரை நடைபெற்ற தேடுதல் முயற்சி, இங்குள்ள கடல்நீரின் வெப்பநிலை மற்றும் பல்வேறு காரணங்களை வைத்து பார்க்கும் போது, விபத்தில் சிக்கியவர்களை இனியும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை," என்று அமெரிக்க கடலோர காவல்படையை சேர்ந்த ஷானன் கிலரீத் தெரிவித்துள்ளார்.

    "பால்டிமோரின் ஸ்காட் கீ மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தை +1-202-717-1996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது.

    • விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண கவர்னர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். #ContainerShip #Fire #SailorsRescued
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது.  #ContainerShip #Fire #SailorsRescued #tamilnews

    ×