என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Himachal Pradesh"
மணாலி:
இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.
கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.
தசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.
தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.
தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோசமாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.
இதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 58 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இமாசலபிரதேச அணி தரப்பில் அங்கித் மைனி 3 விக்கெட்டும், கன்வார் அபினய் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இமாசலபிரதேச அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரஷாந்த் சோப்ரா 68 ரன்னும், ரிஷி தவான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். #SyedMushtaqAliTrophy
இவ்விபத்தில் 26 பேர் படுகாயமுற்றதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களில், 18 பேர் சோனகர் மாவட்டத்தில் நலாஹார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #HimachalPradeshAccident
காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.
இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD
இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அது அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலா தளமான குலு, மனாலியில் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மனாலியை இணைக்கும் சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மனாலி நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குலு, மனாலியில் சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாதபடி மனாலியில் முடங்கி உள்ளனர்.
பியாஸ் நதியில் நேற்று ஒரு பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இமாச்சலபிரதேசத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகி விட்டனர்.
இதையடுத்து வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. இன்று இமாச்சலபிரதேசத்தில் பல இடங்களில் மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த 35 மாணவர்களும் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் 20 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையில் மிக கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவும் மக்களை வாட்டியுள்ளது. இதற்கிடையே மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #HimachalRains
பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #HimachalRains #Schoolsclosed
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்