search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு - முதல் மந்திரி இரங்கல்
    X

    இமாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு - முதல் மந்திரி இரங்கல்

    இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அம்மாநில முதல் மந்திரி ஜெய்ரம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். #HimachalAvalanche
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். #HimachalAvalanche
    Next Story
    ×