search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 killed"

    • கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் கிராமம் கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்.

    இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வந்தபின் தவிப்பதை விட வருமுன் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும், காக்க ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்" என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும்படியும், சிறுவர்களையும் உரிய முறையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. 7 பேர் பலியான சம்பவம் நடந்த கெடிலம் பண்ருட்டி முதல் கடலூர் வரையில் தண்ணீர் தேங்கியுள்ள 4 இடங்களிலும், பெண்ணையாற்றில் கண்டரக்கோட்டை பகுதியில் இருந்து கடலுார் மஞ்சக்குப்பம் வரையில் நெல்லிக்குப்பம், சாவடி, செம்மண்டலம் உள்ளிட்ட 5 இடங்களிலும் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    எச்சரிக்கை பலகைவைப்பதுடன், போலீசார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தினால், இனி மாவட்டத்தில் நீர்நிலை உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்

    பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். #PakistanRain
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகளின் மீது பாறைகள் விழுந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி பெண் உள்பட 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 
    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

    பன்னர் மாவட்டத்தில் ஒரு வேனில் பயணம் செய்தோர் அப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். #PakistanRain
    இமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். #HimachalAccident
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident
    அரியானாவில் கடுமையான மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். #DenseFog #HaryanaAccident
    புதுடெல்லி:

    டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் சென்றபோது மூடுபனி காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



    இந்த விபத்து காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏராளமான ஜேசிபி வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. #DenseFog #HaryanaAccident
    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் இன்றிரவு ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து இன்றிரவு  ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.



    இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். #7dead  #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். #UPRain
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் பலியாகினர். மேலும், தண்ணீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

    கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு உ.பி.யில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #Accident
    மும்பை;

    மகாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் டயர் பஞ்சரானது.

    இதனால் கார் கட்டுப்பாட்டை இழ்ந்தது. டிரைவர் காரை நிறுத்த போராடினார். இதையடுத்து, கார் எதிர்த்திசையில் சென்றது. அங்கு வந்து கொண்டிருந்த மற்றொரு காருடன் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெண் உள்பட 7 பேர் பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி பகுதிகளில் கனமழையினால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் குறைந்த அளவு முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென்மேற்கு பருவ மழையானது கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், தமிழகம், புதுவையின் சில பகுதிகள், ராயலசீமா, கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகளில் மேலும் தீவிரமடைந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், கர்நாடகா, ராயலசீமாவின் இதர பகுதிகள், தெற்கு கொங்கன், கோவா,தெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திரா, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் அடுத்த 48 மணிநேரம் மழையின் தாக்கம் இருக்கும்.

    புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் கொங்கண், கோவா பகுதியில் காணப்படுகிறது. இது மெதுமெதுவாக மகாரஷ்டிரா கடலோரப் பகுதியை நோக்கி நகருவதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 29ந் தேதி தொடங்கியது. ஆனாலும் 3 நாட்களுக்குப் பின்னரே ஜூன் 1-ந் தேதி கர்நாடகாவில் தொடங்கியது. கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா உள் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.

    வழக்கமான மழை அளவை விட 40% கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த கனமழையினால் 7 பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி, குப்பி, கொரட்டகரே பகுதிகளில் இரண்டாவது நாட்களாக பெய்த கனமழையினால் பல இடங்களில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனம் தத்தளித்தப்படி செல்கிறது.

    கதக் மாவட்டம், தம்பாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மல்லவாஜடால் என்ற பெண் பலியானார். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் கதக் மாவட்டம் முழுவதும் எங்கும் பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியது.

    அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #SriLankafloods
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், பதுலா, கேகலா மற்றும் காலுதரா பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பபட்டுள்ளன. மழையினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்.


    மழையினால் 170-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் மீட்புப்பணிகளை நடத்த அதிபர் சிரிசேனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இலங்கையில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  #SriLankafloods

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #WestBengallightning
    கொல்கத்தா:

    வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி, மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மட்டும் மின்னல் தாக்கி 7 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வடக்கு 24 பாரகான் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

    மேலும், பான்குருகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengallightning 
    ×