search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lightning Strikes"

    • திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கியது.

     கடலூர்:

     கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமி (வயது50) அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி (40) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் அவரவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் 1 மாடும் முத்து மகன் அய்யாசாமியின் 2 மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் நடேசன் அவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    பின்னர் மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமி மற்றும் முத்து மகன் அய்யாசாமி ஆகிய 2 பேருக்கும் கண்பார்வைs பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்து போன மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது.

    ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி  என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது.

    இதை உறுதிசெய்த அதிகாரிகள், ``ராக்கெட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, திட்டம் வெற்றிதான்" என்று தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய  வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இதுபோல் 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட சனி- 5 ராக்கெட் ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. இது மனிதர்களைக் கொண்டு சென்ற ராக்கெட். இது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்போதும் பெரிய பாதிப்புகள் இல்லை.

    ராக்கெட்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் ராக்கெட்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது. 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #WestBengallightning
    கொல்கத்தா:

    வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி, மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மட்டும் மின்னல் தாக்கி 7 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வடக்கு 24 பாரகான் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

    மேலும், பான்குருகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengallightning 
    உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலுக்கு 80 பேர் பலியாகியதோடு, 136 பேர் படுகாயமடைந்துள்ளனர். #duststrom

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று சூறாவளிப்புயல் தாக்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    அதேபோல், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் 24 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் 6, ஆந்திராவின் 3, டெல்லியின் 2, உத்தரகாண்டின் 1 மாவட்டங்களில் புழுதிப்புயல், மின்னல் தாக்கியுள்ளது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 14, ஆந்திரப் பிரதேசத்தில் 12, டெல்லி 2, உத்தரகாண்டில் 1 ஆகியோர் பலியாகி உள்ளதாகவும், 136 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DustStormUP
     
    முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 134 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மே 9ல் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியதில் 18 பேர் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். #duststrom
    ×