search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northern states"

    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

    இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதல் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

     

    இதற்கிடையில் நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு நீட் மாணவர்களும் பொதுமக்களும் வட மாநிலங்களில் போராட்டம் நடந்தத் தொடங்கியுள்ளனர். வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ராஸ்ஜ்தான் கோட்டா நகரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    மேலும் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.
    • 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

    டெல்லியில் கடந்த 29-ந்தேதி நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கு மாறு மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

    வெப்ப அலை பாதிப்பால் நேற்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசா வில் 10 பேரும், ஜார்க்கண் டில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த மாநிலங்களில் 1,300-க்கும் மேற்பட்டோர் வெயில் பாதிப்பால் மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

    மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறை யாமல் வெப்ப அலை தொடர்ந்து வரும் நிலையில் நேற்று வரை குறைந்தது 54 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக பீகாரில் 32 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்து விட்டனர்.

    வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இன்று காலை நிலவரப் படி கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்களில் 45 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் வெயில் தாக்கம் மிக மிக அதிகளவு காணப்படுகிறது.

    குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த ஊழியர்கள் ஆவர்.

    தீவிர காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவர்கள் மிசாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    பீகாரில் வெப்ப பாதிப் பால் உயிரிழந்த 14 பேரில் 10 பேர் தேர்தல் பணியாளர்கள் ஆவர்.

    • நாடெங்கும் வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி விளக்கினார்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

    இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

    இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    நாடெங்கும் இந்த வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கிறபோது விரைவான நடவடிக்கை எடுக்கவும் என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    வெப்ப அலைகளினால் மக்களின் ஆரோக்கியம் லேசான அளவில் மட்டுமே பாதிக்கக்கூடிய அளவில் பார்த்துக்கொள்ள ஆராய்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. வெப்ப அலைகளை எதிர்கொள்வதில் குறைந்த, நடுத்தர நீண்டகால செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசியத்திட்டத்தின்கீழ், வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்புகள் குறித்து தினமும் எல்லா மாநிலங்களிலும் கண்காணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா விளக்கினார்.

    வெப்ப அலையை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற உடல்நல பாதிப்புகளை சந்திக்க உதவுவதற்காகவும் பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையத்தின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன
    • 2515 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டன.

     திருப்பூர் :

    வடமாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இருந்து மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன. இதன் காரணமாக திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2515 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு, நஞ்சப்பா பள்ளியில் வைக்கப்பட இருக்கின்றன. இதன் பின்னர் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன.

    • நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இதில் இளநீர் சாகுபடிக்கான வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள் மட்டும் 3.5 லட்சம் உள்ளன.சாவக்காடு சிகப்பு, பச்சை, மலேசியன் சிகப்பு, மஞ்சள், நெட்டை ஒட்டு ரக இளநீர் சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாகுபடியாகும் இளநீர், திருப்பூர், சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் அனுப்பப்படுகிறது.அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    கத்திரி வெயில் முடிந்தும், நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை, ஆந்திரா, குஜராத், புதுடெல்லி பகுதிகளில் இப்பகுதி இளநீருக்கு அதிக கிராக்கி உள்ளது.ஆனால் இளநீர் வரத்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தேவைக்கே போதுமானதாக உள்ளது.

    வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடு முழுவதிலும், தினமும் 3 முதல் 5 லட்சம் இளநீர் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.இதன் வாயிலாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் தினமும் 57 லட்சம் ரூபாய் வரையில் வர்த்தகம் நடக்கிறது. தற்போது வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், பண்ணையில் ஒரு இளநீர் 31 முதல் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் துவங்கும் வரையில் விலை குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலுக்கு 80 பேர் பலியாகியதோடு, 136 பேர் படுகாயமடைந்துள்ளனர். #duststrom

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று சூறாவளிப்புயல் தாக்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    அதேபோல், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் 24 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் 6, ஆந்திராவின் 3, டெல்லியின் 2, உத்தரகாண்டின் 1 மாவட்டங்களில் புழுதிப்புயல், மின்னல் தாக்கியுள்ளது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 14, ஆந்திரப் பிரதேசத்தில் 12, டெல்லி 2, உத்தரகாண்டில் 1 ஆகியோர் பலியாகி உள்ளதாகவும், 136 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DustStormUP
     
    முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 134 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மே 9ல் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியதில் 18 பேர் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். #duststrom
    ×