என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநிலங்கள்"

    • அடுத்த சில நாட்களுக்கு பல வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
    • கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் மேற்கு வங்கத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. வட மாநிலங்களுக்கு வானிலை மையம் அலர்ட்கடந்த 24 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில நாட்களுக்கு பல வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.  மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தின் ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர். அங்கு கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

    அதேபோல் மேற்கு வங்கத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    கார்பட்டா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. வெள்ளம் பாய்ந்தோடியதில், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளன.

    இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

    • நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இதில் இளநீர் சாகுபடிக்கான வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள் மட்டும் 3.5 லட்சம் உள்ளன.சாவக்காடு சிகப்பு, பச்சை, மலேசியன் சிகப்பு, மஞ்சள், நெட்டை ஒட்டு ரக இளநீர் சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாகுபடியாகும் இளநீர், திருப்பூர், சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் அனுப்பப்படுகிறது.அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    கத்திரி வெயில் முடிந்தும், நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை, ஆந்திரா, குஜராத், புதுடெல்லி பகுதிகளில் இப்பகுதி இளநீருக்கு அதிக கிராக்கி உள்ளது.ஆனால் இளநீர் வரத்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தேவைக்கே போதுமானதாக உள்ளது.

    வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடு முழுவதிலும், தினமும் 3 முதல் 5 லட்சம் இளநீர் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.இதன் வாயிலாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் தினமும் 57 லட்சம் ரூபாய் வரையில் வர்த்தகம் நடக்கிறது. தற்போது வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், பண்ணையில் ஒரு இளநீர் 31 முதல் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் துவங்கும் வரையில் விலை குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது.

    சாம்லி மாவட்டத்தில் கந்தவா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது டெல்லியில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை. லேசான அதிர்வு மட்டும் காணப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதை தாங்கள் சில விநாடிகள் உணர்ந்ததாக டுவிட்டரில் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.

    இதே போல் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் இன்று காலை 7.05 மணி அளவில் லேசான நிலடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
    ×