என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Unseasonal rains"
- திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகியதால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது.
- எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சோலையூர் மலை கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து ள்ள இப்பகுதியில் தற்போது நீல நிற கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.
சுமார் 60 நாள் பயிரான கத்தரிக்காய் தற்போது அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழுத்தாக்குதல் நோய் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது. புழுத்தாக்குதல் நோயை கட்டுப்படுத்து வதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவம் தவறி பெய்த சாரல் மழை காரணமாக மருந்தடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தெளிக்கப்படும் மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகிப் போனது. இதனால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது. எனவே விளைந்த கத்தரிக்காயை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்தரிக்காய் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது . இப்பகுதி முழுவதும் அழுகிய கத்தரிக்காய் சாலை முழுவதும் கொட்டப்பட்டு அழுகி மட்கி வீணாகிப் போனது. தற்போது கத்தரி க்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.28ல் இருந்து ரூ.30 வரை வாங்கப்படும் நிலையில் புழுத்தாக்குதல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கத்தரி க்காயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளனர். குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய் ஆடு, மாடுகளுக்கு இரையாகி வருகிறது. எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்