search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - மழைக்கு பெண் உள்பட 7 பேர் பலி
    X

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - மழைக்கு பெண் உள்பட 7 பேர் பலி

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெண் உள்பட 7 பேர் பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி பகுதிகளில் கனமழையினால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் குறைந்த அளவு முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென்மேற்கு பருவ மழையானது கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், தமிழகம், புதுவையின் சில பகுதிகள், ராயலசீமா, கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகளில் மேலும் தீவிரமடைந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், கர்நாடகா, ராயலசீமாவின் இதர பகுதிகள், தெற்கு கொங்கன், கோவா,தெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திரா, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் அடுத்த 48 மணிநேரம் மழையின் தாக்கம் இருக்கும்.

    புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் கொங்கண், கோவா பகுதியில் காணப்படுகிறது. இது மெதுமெதுவாக மகாரஷ்டிரா கடலோரப் பகுதியை நோக்கி நகருவதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 29ந் தேதி தொடங்கியது. ஆனாலும் 3 நாட்களுக்குப் பின்னரே ஜூன் 1-ந் தேதி கர்நாடகாவில் தொடங்கியது. கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா உள் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.

    வழக்கமான மழை அளவை விட 40% கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த கனமழையினால் 7 பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி, குப்பி, கொரட்டகரே பகுதிகளில் இரண்டாவது நாட்களாக பெய்த கனமழையினால் பல இடங்களில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனம் தத்தளித்தப்படி செல்கிறது.

    கதக் மாவட்டம், தம்பாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மல்லவாஜடால் என்ற பெண் பலியானார். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் கதக் மாவட்டம் முழுவதும் எங்கும் பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியது.

    அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    Next Story
    ×