search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கோப்பை - தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    ரஞ்சி கோப்பை - தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்

    தர்மசாலாவில் தொடங்கிய ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இந்நிலையில், அந்த அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. 4 நாட்கள் கொண்ட இப்போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

    டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபினவ் முகுந்த் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 7 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.

    அபராஜித் - இந்திராஜித் நிதானமாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்க இந்த ஜோடி போராடியது. தமிழ்நாடு அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

    அடுத்து இறங்கிய அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  தன்வர் ஒத்துழைப்பு கொடுத்தார். தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
    இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் இமாசல் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    Next Story
    ×