search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himachal Pradesh"

    • சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.
    • முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

    இதையடுத்து, இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். மேலும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, துணை முதல்வராக பதவியேற்றார்.

    பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்நிலையில், சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    பின்னர் பேசிய சுக்விந்தர் சிங், "இமாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசை அமைப்பதில் எந்த சவாலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய அரசு அமைப்பதில் எந்த சவாலும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு அமைச்சரவை அமைக்கப்படுகிறது. முதல்வர் எம்.எல்.ஏ.க்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, எந்த சவாலும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன்.
    • புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்ற சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    சிம்லா:

    இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது.

    மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார்.

    இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர்சிங் சுகுவுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 12ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
    • குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன.

    இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  இதேபோல் டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

    • 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
    • 55 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

    55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிட்டாலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரசும் உள்ளன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ந் தேதி எண்ணப்படுகிறது.

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
    • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

    காங்கரா: 

    வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

    உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

    ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
    • முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆம் ஆத்மி என 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல் கட்டமாக 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் மகன் சுனில் சர்மா மாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    • ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

    பிலாஸ்பூர்:

    பிரதமர் மோடி நாளை மறுநாள் (5-ந் தேதி) இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்று பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.
    • 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வந்தது.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்தி மற்றும் எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசினர். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்தனர்.

    தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் அமைச்சர்கள் பேசினர். அப்போது, எதிர்க்கட்சிகள் உறுதியான பிரச்சனைகளை கொண்டு வரத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பேசும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

    68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். இவர்கள் தவிர 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து.
    • நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் முடிவை வரவேற்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை வேறு திசையில் கொண்டு செல்ல முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்று நான் கருதுகிறேன். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    முழு நாடும் இந்த முடிவை வரவேற்கும் நிலையில், பெரிய அளவிலான இந்த வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி எப்போதும் இளைஞர்களைப் பற்றியே சிந்தித்து நல்லது செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019

    மணாலி:

    இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.

    கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.

    தசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

    தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.


    இதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.

    தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோசமாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.

    இதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019

    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், தமிழக அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாசலபிரதேச அணி வெற்றி பெற்றது. #SyedMushtaqAliTrophy
    புதுடெல்லி,

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 58 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இமாசலபிரதேச அணி தரப்பில் அங்கித் மைனி 3 விக்கெட்டும், கன்வார் அபினய் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இமாசலபிரதேச அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரஷாந்த் சோப்ரா 68 ரன்னும், ரிஷி தவான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். #SyedMushtaqAliTrophy
    ×