search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாசலப்பிரதேசம்"

    இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அம்மாநில முதல் மந்திரி ஜெய்ரம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். #HimachalAvalanche
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். #HimachalAvalanche
    தர்மசாலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாடு அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  ஒத்துழைப்பு கொடுத்த தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இமாசல் அணி களமிறங்கியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ராகவ் தவான் 71 ரன்னில் வெளியேறினார்.
    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நிகில் காங்டா 44 ரன்களில் அவுட்டானார்.

    அதன்பின் இறங்கிய அங்கிட் கால்சி, ரிஷி தவான் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் அணி 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. அங்கிட் கால்சி 99 ரன்னிலும், ரிஷி தவான் 71 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தமிழ்நாடு சார்பில் நடராஜன், மொகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இமாசல் அணி தமிழ்நாட்டை விட 113 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    தர்மசாலாவில் தொடங்கிய ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இந்நிலையில், அந்த அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. 4 நாட்கள் கொண்ட இப்போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

    டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபினவ் முகுந்த் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 7 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.

    அபராஜித் - இந்திராஜித் நிதானமாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்க இந்த ஜோடி போராடியது. தமிழ்நாடு அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

    அடுத்து இறங்கிய அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  தன்வர் ஒத்துழைப்பு கொடுத்தார். தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
    இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் இமாசல் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    இமாசலப்பிரதேசத்தில் ராணுவ லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் அதில் பயணித்த ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். #Accident
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலம் காங்ரா மாவட்டத்தில் இன்று மாலை ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    சத்தாரி பகுதியில் வந்தபோது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் பயணித்த 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். 

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவர்களை அருகிலுள்ள பாலாம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #Accident
    இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியான வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Virbhadra Singh
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் வீர்பத்ர சிங் (84). இவரது உடல்நிலை நேற்று பலவீனம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ரசிங் உடல்நிலை பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மருத்துவமனையில் சேர்ந்ததை அறிந்த முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அங்கு சென்று பார்த்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

    வீர்பத்ர சிங், இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 6 முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Virbhadra Singh
    117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் சிம்லாவில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    சிம்லா:

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள் நிறைந்து வருகின்றன. 

    இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநிலத்தின்  தலைநகரமான சிம்லாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 1901ல் சிம்லாவில் 277 மிமீ மழை பதிவானது.
    இதற்கு அடுத்தபடியாக ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி காலை 8 மணி வரை 172. 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 13-ம் தேதி காலை 8 மணியளவில் 73.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2011ல் 75 மிமீ மழை பதிவானது. 

    இதேபோல், லாஹவுல், ஸ்பிடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    இமாச்சலப்பிரதேசத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. #Earthquake
    சிம்லா:

    வட மாநிலமான இமாசலப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.18 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக  வெளியாகவில்லை.

    உலகிலேயே இமாசலப் பிரதேசமும், உத்தரகாண்ட் மாநிலமும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய அபாய பகுதியில் இருப்பதாக நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    ×