என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாசலப்பிரதேசம் - முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்30 Aug 2018 6:44 PM GMT
இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியான வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Virbhadra Singh
சிம்லா:
இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் வீர்பத்ர சிங் (84). இவரது உடல்நிலை நேற்று பலவீனம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ரசிங் உடல்நிலை பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மருத்துவமனையில் சேர்ந்ததை அறிந்த முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அங்கு சென்று பார்த்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
வீர்பத்ர சிங், இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 6 முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Virbhadra Singh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X