search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாசலப்பிரதேசம் - முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி
    X

    இமாசலப்பிரதேசம் - முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி

    இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியான வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Virbhadra Singh
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் வீர்பத்ர சிங் (84). இவரது உடல்நிலை நேற்று பலவீனம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ரசிங் உடல்நிலை பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மருத்துவமனையில் சேர்ந்ததை அறிந்த முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அங்கு சென்று பார்த்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

    வீர்பத்ர சிங், இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 6 முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Virbhadra Singh
    Next Story
    ×