search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT students"

    • ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
    • பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான செயற்கை கோள்கள் அனுப்பி வரும் நிலையில் அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.

    விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல்) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல் காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கி உள்ளது.

    இது அக்னிலெட் எந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் மற்றும் முற்றிலும் 3டி அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 கே.என். அறை- கிரையோ ஜெனிக் எந்திரம் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும். இந்த பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அக்னி பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கிய 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HimachalFloods #HimachalRains
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து 50 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 
     
    மாயமான மாணவர்கள் உள்பட அனைவரையும் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 50 ஐ ஐ டி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் கூறினர். #HimachalFloods #HimachalRains
    ×