

அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே சமயம் வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
இந்நிலையில், ஐஐடி தன்பாத் மாணவர்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் மாணவர்கள் பட்டாசை பற்ற வைத்து அதன் மேல் பெரிய பிளாஸ்டிக் குப்பை குப்பை தொட்டியால் மூடுகின்றனர். பட்டாசு வெடித்ததும் அந்த குப்பை தொட்டி 4 மாடி அளவிற்கு உயர பறந்து கீழே விழுகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.