search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government bus"

    • போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
    • புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    புதுச்சேரி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுவையை பொறுத்தவரை நகரம், கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஆனால் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகளவில் தமிழக அரசு பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. இதில் புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, கும்பகோணம், காரைக்கால், கடலூர் பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதுவை பஸ்நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர்.

    புதுவை உப்பளம் அம்பேத்கார் சாலையில் உள்ள அரசு பணிமனையில் 54 பஸ்களும், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணி மனையில் இருந்து 22 பஸ்களும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பகுதியிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

    பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

    அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

    அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

    தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.

    • சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொது மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.

    சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

    அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந் தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோ வில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.

    முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந் தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.

    • தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் இன்று காலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றதும், பணிமனைக்கு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் புறப்பட்டனர்.

    அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச்சென்றுள்ளார்களா? என அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு அருகே உள்ள டூல்ஸ் பாக்சை (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) திறந்து பார்த்தனர்.

    அங்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர்.

    அதனை வைத்துச்சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு வாலிபர் அங்கு வந்து பஸ்சில் தான் வந்தபோது, சிம்கார்டை தொலைத்து விட்டதாக கூறி பஸ்சுக்குள் ஏறி தேடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இந்நிலையில் பணத்தை விட்டுச்சென்றதாக அவர் கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் போக்குவரத்து துறையினர், கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியபோது, வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை கொண்டு வந்தது ஏன்? அது அவருடையது தானா? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • 7 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் எப்போதுமே இந்த பஸ் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் மேலூரை அடுத்துள்ள வஞ்சிநகரம் ஊராட்சியை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்மாய்க் கரையில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ஜீவானந்தம், பயணிகள் சாந்தி,ராஜேஸ்வரி, பத்மா, பாணு உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, தனிப்பிரிவு ஏட்டு விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காய மடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
    • தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    அதேபோல அரசு போக்குவரத்து கழகம் நெல்லைக்கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 2001 ஜனவரி 14 முதல் தினமும் மாலை 4.15 மணிக்கு சேலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கத்திலும் பஸ் இயக்கப்பட்டது.

    அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் 2014-ம் ஆண்டு பகலில் நெல்லைக்கு இயக்கிய பஸ் சேவையை நிறுத்திவிட்டது. 2021 இல் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓசூர் கிளை தொடங்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து நெல்லைக்கு இயங்கிய பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நீட்டிக்கப்பட்டது .

    இதனால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது. இந்த பஸ்சிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் நெல்லைக்கோட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பு இல்லாமல் சேலம் கலியக்காவிளை பஸ் சேவையை நிறுத்தியது. இதனால் சேலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது.
    • அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இது விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன்,காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர் ஜெயசீலன் மற்றும் பயணிகள் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
    • பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.

    பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.

    ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.

    டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
    • எனவே பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரி கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்குஅனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு உவரி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு குளிர்சாதன பஸ் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் பக்தர்களை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர், இந்த பஸ்சில் தசரா பக்த ர்கள் ஏராளமானவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். சுற்றுப்புற கிராம மக்கள்மற்றும் பயணிகள் வசதிக்காக இந்த அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×