search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ வைப்பு"

    • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

    பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

    அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    • படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது.
    • கொள்ளை குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    மதுரை :

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்ரகாளி அம்மன், பாரை கருப்பு அய்யனார் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்த முதல் மரியாதையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகனுக்கும், அதே பகுதி தி.மு.க.வைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு மர்மகும்பல் கற்களை வீசி எரிந்தும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்பலம் தரப்பினரும், வேல்முருகன் தரப்பினரும் மோதிக்கொண்டதில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார், சுப்பையா, சூர்யா, விஜய், வேல்விழி மற்றும் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது. இது குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்று அதிகாலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் டாட்டா ஏஸ் வாகனம் ஆகியவற்றிற்கு மர்மகும்பல் நள்ளிரவில் தீ வைத்துள்ளது. இதில் அந்த வாகனங்கள் கொளுந்து விட்டு எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதால் சம்பவம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மனைவி -மாமியார் மீது வழக்கு
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, மனைவி வாழ்ந்து வந்தார்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

    இவரது மனைவி உஷாராணி (37). தம்பதியினருக்கு பரத்குமார் (13) என்ற மகனும், காவியஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.

    சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷாராணி, கணவனை பிரிந்து கண்ண மங்கலம் அருகே உள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சுரேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவி உஷாராணியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உஷாராணி மற்றும் அவரது அவரது தாய் பூஷணம் ஆகிய 2 பேரும் சேர்ந்து,' நீ செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி' என கூறி, சுரேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.

    தீக்காயங்களுடன் அலறியபடி தெருவுக்கு வந்த சுரேஷை, அப்பகுதி மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்க ம்பாறை அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

    இதுகுறித்து சுரேஷ் தந்த வாக்கு மூலத்தின் பேரில் கண்ண மங்கலம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மகாலட்சுமி, உஷாராணி, பூசணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் வாட்டர் வாஜித். இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே யுள்ள முஸ்லிம் கொட்டாய் பகுதியில் மசூதியில் உருசு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வாட்டர் வாஜித் சொகுசு காரில் வந்தார். பின்னர் அவர் மசூதிக்குள் சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
    • உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் 40% மற்றும் முக்கியமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த மே மாதம் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

    இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு ஏராளமான வீடுகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன.

    இந்நிலையில், மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள மோரே மாவட்டத்தில் இன்று ஒரு கும்பல் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்தது.

    காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடந்த மறுநாளில் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

    உள்ளூர்வாசிகள் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை சபோர்மேனாவில் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சரிபார்த்தனர். அப்போது சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.
    • கைதான 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சண்முகா நகரை சேர்ந்தவர் அனிஹரோன் (வயது 65).

    இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வருகிறார்.

    கீழ் தளத்தை உக்கடத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சிக்கந்தர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை, சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனை பார்த்த கட்டிடத்தின் உரிமையாளர் அனிஹரோன் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் அனிஹரோன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்தது உக்கடத்தை சேர்ந்த உஸ்மான் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிக்கந்தர் வேலை விஷயமாக உஸ்மானிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த கடனை உஸ்மான் திருப்பி கேட்டபோது, சிக்கந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க உஸ்மான் நினைத்துள்ளார்.

    இதுகுறித்து தனது நண்பர்களான மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பி.டி.ரமேஷ், வீரகேளத்தை சேர்ந்த சபரிகிரிவாசன்(35), ராமநாதபுரத்தை சேர்ந்த அயோத்தி ரவி ஆகியோரிடம் தெரிவித்தார்.

    பின்னர் 4 பேரும், சுங்கம் பகுதியில் சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.

    சிக்கந்தர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.

    கைதானவர்களில் சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோர் இந்து முன்னணியில் உறுப்பினராக இருப்பதும், பி.டி.ரமேஷ் பா.ஜ.க.வில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது.
    • அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே.

    இம்பால்:

    பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சார்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், முதல்-மந்திரி பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது, 'மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.

    அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது.

    இதில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கிழக்கு இம்பாலில் இரு வீடுகளுக்கு தீவைத்ததுடன், கிராமமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கிராமத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 2 பேர் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.

    மணிப்பூரில் 7 ஆயுத கிட்டங்கிகள் உள்ளன. போலீசாருக்கான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் 3 கிட்டங்கிகளில் புகுந்து ஆயுதங்களை சூறையாடினார்கள்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அள்ளி சென்றனர். இதனால் மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது. குகி இன போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் துணையுடன் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

    பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 2 தினங்களாக போராட்டம் மற்றும் தாக்குதலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 கிராம மக்கள் முற்றிலுமாக வீடுகளை இழந்துள்ளனர். குகி இன போராட்டக்காரர்கள் எம்.16 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    நிலைமை கட்டுமீறி போவதால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் விரைகிறார். அவர் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை அவர்களை வேட்டையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

    • போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது50) கூலி தொழிலாளி.இவர் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் பணம் கொடுக்காததால் மனைவியு டன் தகராறில் ஈடுபட்டார். அப்போது போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார். இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவி துடித்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் முத்துகுமரனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
    • வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரி தரப்பினருக்கும், ரங்கதுரை தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும் வைத்தீஸ்வரியை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    மோதலில் ரங்கதுரை தரப்பில் சபிதா என்பவரு க்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரங்கதுரை மற்றும் 5 பேர் மீதும், சபிதா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் உட்பட 3 பேர் என 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் தப்பி ஓட்டம்
    • எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என மிரட்டல்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் ராமன்புதூர் பகுதி யில் பழக்கடை வைத்துள்ளார்.

    நேற்று பிரேம் ஆனந்த் வழக்கம்போல் கடையை திறந்து இருந்தார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு பிரேம் ஆனந்த், பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என்று கூறி பிரேம் ஆனந்திடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கையில் பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். பின்னர் கையில் வைத்தி ருந்த தீப்பெட்டியால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தார். பிரேம் ஆனந்த் உடலில் தீ எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

    அவர்கள் பிரேம் ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தீ வைத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆஸ்பத்திரி யில் பிரேம் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணை யில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

    போலீசார் தேடுவது அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைக் காரர் மீது பெட் ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×