என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையோரம் தூங்கிய தொழிலாளி மீது தீ வைப்பு
- மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.
கோவை,
பொங்கல் பண்டிகை திருவிழாவையொட்டி வெளியூர் செல்வோர் பஸ், ெரயில் நிலையங்களில் காத்திருந்தனர். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் கூலி தொழிலாளி சுரேஷ் (வயது 30) என்பவர் படுத்து கொண்டிருந்தார்.
இவர் மதுரையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.சம்பவத்தன்று சுரேஷ் சாலையோரம் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.
தீ சுரேசின் உடல் முழுவதும் மளமளவேன பரவியது. தொழிலாளி சுரேஷ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேஷை அக்கம்பக்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா, தீவைத்த மர்ம நபர் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் நகர மக்கள் இருக்கும்போது நடந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்