search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் தூங்கிய தொழிலாளி மீது தீ வைப்பு
    X

    சாலையோரம் தூங்கிய தொழிலாளி மீது தீ வைப்பு

    • மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

    கோவை,

    பொங்கல் பண்டிகை திருவிழாவையொட்டி வெளியூர் செல்வோர் பஸ், ெரயில் நிலையங்களில் காத்திருந்தனர். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் கூலி தொழிலாளி சுரேஷ் (வயது 30) என்பவர் படுத்து கொண்டிருந்தார்.

    இவர் மதுரையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.சம்பவத்தன்று சுரேஷ் சாலையோரம் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

    தீ சுரேசின் உடல் முழுவதும் மளமளவேன பரவியது. தொழிலாளி சுரேஷ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேஷை அக்கம்பக்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா, தீவைத்த மர்ம நபர் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் நகர மக்கள் இருக்கும்போது நடந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×