search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் இருந்து களியக்காவிளைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்
    X

    சேலத்தில் இருந்து களியக்காவிளைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்

    • சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
    • தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    அதேபோல அரசு போக்குவரத்து கழகம் நெல்லைக்கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 2001 ஜனவரி 14 முதல் தினமும் மாலை 4.15 மணிக்கு சேலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கத்திலும் பஸ் இயக்கப்பட்டது.

    அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் 2014-ம் ஆண்டு பகலில் நெல்லைக்கு இயக்கிய பஸ் சேவையை நிறுத்திவிட்டது. 2021 இல் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓசூர் கிளை தொடங்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து நெல்லைக்கு இயங்கிய பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நீட்டிக்கப்பட்டது .

    இதனால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது. இந்த பஸ்சிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் நெல்லைக்கோட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பு இல்லாமல் சேலம் கலியக்காவிளை பஸ் சேவையை நிறுத்தியது. இதனால் சேலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×