search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 rupees note"

    • தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் இன்று காலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றதும், பணிமனைக்கு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் புறப்பட்டனர்.

    அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச்சென்றுள்ளார்களா? என அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு அருகே உள்ள டூல்ஸ் பாக்சை (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) திறந்து பார்த்தனர்.

    அங்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர்.

    அதனை வைத்துச்சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு வாலிபர் அங்கு வந்து பஸ்சில் தான் வந்தபோது, சிம்கார்டை தொலைத்து விட்டதாக கூறி பஸ்சுக்குள் ஏறி தேடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இந்நிலையில் பணத்தை விட்டுச்சென்றதாக அவர் கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் போக்குவரத்து துறையினர், கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியபோது, வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை கொண்டு வந்தது ஏன்? அது அவருடையது தானா? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Newrupees

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று காலையில் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் பணம் எடுத்தார்.

    அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 மற்றும் 500 ரூபாய் நோட்டு 1 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது. இதில் 500 ரூபாய் நோட்டு மட்டும் ஒரு பக்கத்தில் ஓரமாக அச்சடிக்கப்படாமல் இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சரியாக அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் கள்ள நோட்டாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்தார். இந்த பணத்தை அங்கிருந்த பொது மக்களிடம் காண்பித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றி தருமா? என கேட்டார். அதற்கு அவர்கள், பணத்தை நேராக வங்கிக்கு கொண்டு சென்று காண்பியுங்கள். அவர்கள் பணத்தை மாற்றி தருவார்கள் என ஆலோசனை கூறினார்கள்.

    இதையடுத்து அவர், 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு நேராக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாடிக்கையாளருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்து உள்ளதால் சரியாக அச்சடிக்கப்படாத 500 ரூபாய் நோட்டை கவனிக்காமல் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து விசாரித்து அவர் மீது தக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Newrupees 

    ×