search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissed"

    ஜம்மு காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #JKAssembly #SupremeCourt
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி,  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், நவம்பர் 21-ம் தேதி சட்டசபையை கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பாஜக தலைவர் ககன் பாகத் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவர் சட்டசபை கலைப்புக்கு முன்பாக, எம்எல்ஏவாக இருந்தவர்.

    ககன் பாகத்தின் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். #JKAssembly #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #Sterliteplant #tngovt #supremecourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

    பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் , ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

    இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தற்போது சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. #Sterliteplant #tngovt #supremecourt
    வாழப்பாடியில் கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி பள்ளி மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை பள்ளி நிர்வாகம், பணிநீக்கம் செய்துள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 7-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், ஜவுளி வியாபாரி. இவரது மகன் (வயது 15) வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியிலுள்ள தனியார் வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குழந்தைகள் தினமான கடந்த 14-ந்தேதி இவரது வகுப்பில் படித்துவரும் மற்றொரு மாணவருடைய கைக்கடிகாரம் மாயமானது.இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் தனி அறையில் வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவர் தான் அந்த கடிகாரத்தை எடுக்கவில்லை என ஆசிரியர் வெங்கடேஷிடம் பலமுறை கூறினார். ஆனால் மாணவர் கூறியதை நம்பாமல் ஆசிரியர் வெங்கடேஷ் பைப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. வீடு திரும்பியதும் வலியால் துடித்த மகனை கண்டதும் உடனே பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி, தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அதற்கு அனுமதித்த வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி, காயம் அடைந்த மகன் புகைப்படங்களுடன், அவரது தந்தை பிரபாகரன் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினார்.

    இந்த தகவல் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்தே மாணவரின் பெற்றோரை அழைத்து பேசிய பள்ளி நிர்வாகம், மாணவரை தாக்கிய ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சின்னு என்கிற முத்துச்சாமி கூறியதாவது:-

    உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது குறித்து தகவல் தெரியவந்ததும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்துவிட்டோம். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர்  சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


    இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மாதவராவ், சினிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 பேரையும் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam
    கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி, வேறு கல்லூரிக்கு செல்லாததால் அவர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்க வில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

    இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவியை ‘டிஸ்மிஸ்’ செய்ய கோவை வேளாண் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அக்டோபர் 1-ந் தேதி வரை பல்கலைக்கழகம் கெடு விதித்திருந்தது. அதற்குள் திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி கல்லூரியில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

    இல்லையெனில் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே கடைசி எச்சரிக்கை என்று மாணவிக்கு கடந்த 26-ந் தேதி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.வாழவச்சனூர் கல்லூரி நிர்வாகமும், தங்களுடைய கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு மாணவியிடம் கடிதம் கொடுத்தது.

    இந்த உத்தரவுகளை மாணவி மீண்டும் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்றுடன் காலக்கெடு முடிந்ததையடுத்து மாணவி டிஸ்மிஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி இனி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மனமுடைந்த மாணவி இன்று வகுப்பறைக்கு சென்றார். மற்ற மாணவ, மாணவிகள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து, வாழவச்சனூர் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லவில்லை. கால அவகாசம் வழங்கப்பட்டும் மாணவி திருச்சி கல்லூரிக்கு செல்லாததால் ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுகிறார்.

    இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகம் விரைவில் உத்தரவு ஆணை வெளியிடும். கல்லூரியை விட்டு மாணவியை நாங்களே வெளியேற்றுவோம். மீண்டும் அவரை கல்லூரிக்குள் சேர்த்து கொள்ள மாட்டோம் என்றார். #ChennaiStudentharassment #AgriCollege

    முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #TripleTalaq
    புதுடெல்லி:

    முத்தலாக் விவாகரத்து முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது.  இதையடுத்து முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மக்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் பாஜகவுக்கு போதிய பலமின்மை காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    எனவே, முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகித் ஆசாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி காமேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



    முத்தலாக் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று ஒருமுறை உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால், அந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  #DelhiHC #TripleTalaq
    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #MansoorAlikhan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.  #MansoorAlikhan
    பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக தள்ளுபடி செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi
    விருதுநகர்:

    மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நிர்மலாதேவி சார்பில் சாத்தூர் கோர்ட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறையும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


    இந்த நிலையில் 4-வது முறையாக ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நேற்று இதே நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #Nirmaladevi
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.



    இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிபதி முத்து சாரதா விசாரணை நடத்தி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.#NirmalaDevi #Karuppasamy #Murugan

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi
    மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுக்களை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nawazsharif #treasoncase #dismissed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    நவாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதே நிலையில், நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெஹ்ரீக் இ இன்சாப், பாகிஸ்தானி அவாமி தெஹ்ரீக் மற்றும் வழக்கறிஞர் அப்துல்லா மாலிக் ஆகியோர் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை நிராகரித்த நீதிபதி மிர்ஷா, மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி தெரிவித்தார். #Nawazsharif #treasoncase #dismissed
    முந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.#MarioGotze
    பெர்லின்:

    32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.

    ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

    அதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

    போர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.

    இதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.#MarioGotze
    ×