search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nawas sharif"

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்கும் என்னும் நிலையில், இம்ரான் கான் பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.



    கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து, நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவர் மீதும் அவரது கட்சி மீதும் இருந்த செல்வாக்sகு குறைந்தது.

    இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.

    அதன் அடிப்படையில், ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், மத்தியிலும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்டில் இன்று நடந்தது. ஜாமின் கோரிய நவாஸ் ஷெரீப், மர்யம் நவாஸ்,  சப்தர் ஆகியோரது மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நவாஸ் ஷெரீப் ஜாமீனில் வெளிவருவார் என எதிர்பார்த்த அவரது ஆதரவாளர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

    நவாஸ் ஷரீப்புக்கு தண்டனை வழங்கிய தேசிய பொறுப்புடமை நீதிபதி பஷீர், அவர் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், தேசிய பொறுப்புடமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர், நவாஸ் ஷெரீப் மீதான மற்ற இரு வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 

    இந்த விலகல் முடிவு தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பஷீர் எழுதியுள்ள கடிதத்தில், நவாஸ் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுக்களை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nawazsharif #treasoncase #dismissed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    நவாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதே நிலையில், நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெஹ்ரீக் இ இன்சாப், பாகிஸ்தானி அவாமி தெஹ்ரீக் மற்றும் வழக்கறிஞர் அப்துல்லா மாலிக் ஆகியோர் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை நிராகரித்த நீதிபதி மிர்ஷா, மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி தெரிவித்தார். #Nawazsharif #treasoncase #dismissed
    ×