search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general elections"

    • பயணத்தின் போது 29 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
    • பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அடுத்த பத்து நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பயணத்தின் போது 29 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாசல பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கிறார். நாளை (மார்ச் 4) தெலுங்கானா செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

     


    இதைத் தொடர்ந்து அதிலாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். அங்கிருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி கல்பாக்கத்தில் உள்ள பாரதிய நபிக்யா வித்யூத் நிகம் லிமிடெட் செல்கிறார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

    தமிழ்நாட்டை தொடர்ந்து ஐதராபாத் புறப்படும் பிரதமர் மோடி மார்ச் 5-ம் தேதி தெலுங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு சங்காரெட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தெலுங்கானாவில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி அங்கும் நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

    பிறகு ஜெய்பூரின் சண்டிகோலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேற்கு வங்காளத்தில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி மார்ச் 6-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு பராசட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அங்கிருந்து பீகார் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து, மார்ச் 7-ம் தேதி ஜம்மு காஷ்மீர் புறப்படுகிறார். ஸ்ரீநகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி அன்று மாலை ஊடகத்தினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

    மார்ச் 8-ம் தேதி டெல்லி செல்லும் பிரதமர் மோடி தேசிய கிரியேட்டர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து அசாம் செல்கிறார். மார்ச் 9-ம் தேதி அருணாச்சல பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி செலா சுரங்க பாதையை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து இடாநகரில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

    அருணாச்சல பிரதேசத்தில் இருந்து அசாம் செல்லும் பிரதமர் மோடி ஜோர்ஹட்டில் லசித் பர்புகான் சிலையை திறந்து வைக்கிறார். பிறகு ஜோர்ஹட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு மேற்கு வங்காளம் செல்லும் பிரதமர் மோடி சிலிகுரியில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற இருக்கிறார்.

    மார்ச் 10-ம் தேதி உத்தர பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி அசாம்கர்-இல் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 11-இல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி. டெல்லியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து மார்ச் 12-ம் தேதி குஜராத் செல்கிறார். பிறகு அங்கிருந்து ராஜஸ்தான் செல்லும் பிரதமர் மோடி மார்ச் 13-ம் தேதி குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை கானொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    • வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
    • அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரிக்கலாம்.

    அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள், நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

    ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு  அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது. 

    • தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.
    • தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் எதிர்ப்பு.

    பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

     


    தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திட்டமிட்டப்படி பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    • இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் மனு தாக்கல்.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது சொந்த ஊரான மியான்வாலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     


    முன்னதாக ஊழல் வழக்கு மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது உள்பட இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார். 

    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
    • மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் அறிவிப்பு.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

    மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்துக் கொண்டது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை தன்வசம் ஆக்கியது பா.ஜ.க. இதன் மூலமாக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

     


    சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் அடுத்த முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் அறிவிக்கப்பட்டார்.

    ராஜஸ்தானில் இரண்டு முறை (2003-08 மற்றும் 2013-18) முதல்வராக பணியாற்றிய வசுந்தரா ராஜே பதவியை கைப்பற்றுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போதைய நிலையில் நாடு முழுக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண் முதல்வர்கள் ஒருவர்கூட இல்லை. மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே நாட்டின் ஒரே பெண் முதல்வர் ஆவார்.

    முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஆனந்திபென் படேல், உமா பாரதி, வசுந்தரா ராஜே போன்ற பெண் முதல்வர்கள் பா.ஜ.க.-வில் ஆட்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன்.
    • அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் இனி எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என்று அறிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், " கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே கூறுகின்றீர்கள். பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வது யார் என உங்களுக்கு தெரியும்."

    "பிரதமருக்கு அருகில் இருந்துவிட்டு தற்போது உறவு இல்லை என்று சொல்வது யார்? பா.ஜ.க. தேசிய தலைமையிடம், மாநில தலைமையை மாற்ற கோரிக்கை வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது. மூன்றாவது முறையும், நாட்டை ஆள்வதற்கான தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்."

    "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. #Facebook



    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி ஃபேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.

    ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் ஃபேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும். 

    விளம்பரங்களை வழங்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் ஃபேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.



    முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அரசியல் விளம்பரங்களை தெளிவாக கண்டறிய முடியும். புதிய விதிமுறைகள் ஃபேஸ்புக் சார்பில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவை பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் அமலாகும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    அரசியல் விளம்பரங்களை பயனர் க்ளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி எனும் பக்கம் திறக்கும். இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற விவரங்களும், இதற்கு விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
    வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்றதால் ஷேக் ஹசினா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.பி. ஆனார். #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நேற்று  பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

    மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
     
    கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.



    இதேபோல், நரைல் 2 தொகுதியில் போட்டியிட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மஷ்ரபே பின் மோர்ட்டாசா 2,74,418 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

    எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections


    ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா(73) ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் டாக்கா நகரில் உள்ள தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஜியா நீதிமன்றத்தை நாடி இருந்தார்.



    இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கலிதாவின் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டாக்கா உயர்நீதி மன்றம், தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலம் சிறைவாசம் விதிக்கப்பட்ட ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்கும் என்னும் நிலையில், இம்ரான் கான் பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.



    கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து, நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவர் மீதும் அவரது கட்சி மீதும் இருந்த செல்வாக்sகு குறைந்தது.

    இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.

    அதன் அடிப்படையில், ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், மத்தியிலும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட இருந்த 2 தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவன்பீல்டு ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட இருந்தார்.

    தற்போது அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக அந்த இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

    லாகூரில் உள்ள என்.ஏ 127 தொகுதியில் அலி பர்வேஷ் மாலிக்கும், பஞ்சாப் மாகாணத்தின் என்.ஏ 173 தொகுதியில் இர்பான் ஷாஃபி கோக்தர் ஆகியோர் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
    ×