என் மலர்
நீங்கள் தேடியது "coalition government"
- 'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா கூறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மழுப்பலாக பதில் அளித்தார்.
- அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, 'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா கூறவில்லை என்று மழுப்பலாக பதில் அளித்தார்.
இந்நிலையில், செய்தி தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்' என பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு இருந்தும் செத்துப்போனது போல் உள்ளது. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிகமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும். மாநிலத்தில் ஒரு வளர்ச்சி பணி கூட நடைபெறவில்லை. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் மாநில அரசு இன்னும் ஒரு தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் திவாலாகி வருகின்றன. கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.
முதல்-மந்திரி குமாரசாமி வடகர்நாடகத்தில் ஒரு நாள் கூட சுற்றுப்பயணம் செய்யவில்லை. 100 நாட்களை கொண்டாடி வரும் கூட்டணி அரசு, முக்கிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும். எக்காரணம் கொண்டும் இந்த அரசு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யாது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா விரைவில் ஆட்சியை பிடிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 50 சதவீத இடங்களில் வெற்றி பெறும்.
எனது தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவது உண்மை தான். நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa






