search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh PM"

    • தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார்.
    • வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச துணை தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தோம் என்றார்.

    அதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ஹசீனாவுடன், கவுதம் அதானி சந்திப்பு.
    • மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என ஹசீனா தகவல்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆலியா தர்காவுக்கு சென்ற ஹசீனா வழிபாடு நடத்தினார். பின்னர் வங்காளதேச தூதரகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, மியான்மர் நாட்டில் இருந்து தப்பி தற்போது வங்கதேசத்தில் வசித்து வரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், இந்தியா ஒரு பெரிய நாடு, ரோகிங்கியா அகதிகள் பிரச்சினையை சமாளிக்க வங்களாதேசத்திற்கு இந்தியா நிறைய உதவ முடியும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து எல்லை தாண்டி ஓடும் நதிகளை புத்துயிர் பெறச் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

    அந்த ஆறுகளை தூர்வாரினால் அவற்றின் நீரோட்டம் இன்னும் மேம்படும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அவர் எனக்கு ஒரு சகோதரி போன்றவர், நான் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்க முடியும்.நாங்கள் எப்போதும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன், ஹசீனா பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச பிரதமரின் பேரன் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. #SriLankablasts #Colomboblast
    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

    இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.



    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலிலும் குண்டு வெடித்தது.

    அப்போது ஓட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டுவெடிப்பில் சிக்கினர். இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #SriLankablasts #Colomboblast
    வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #BangladeshPM #Hasina
    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
     
    கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

    இந்நிலையில்,  நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.



    இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

    முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina
     
    வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்றதால் ஷேக் ஹசினா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.பி. ஆனார். #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நேற்று  பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

    மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
     
    கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.



    இதேபோல், நரைல் 2 தொகுதியில் போட்டியிட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மஷ்ரபே பின் மோர்ட்டாசா 2,74,418 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

    எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections


    ×