என் மலர்
நீங்கள் தேடியது "sri lanka blast"

கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் ராஜபக்சேவின் அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த உள் நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
உள் நாட்டு போர் முடிந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் 253 பேர் பலியாகினர்.
இது குறித்து கோத்தபய ராஜபக்சே நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். உள் நாட்டு போரின் போது உளவுத்துறையும், வெளிப்புற கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாக இருந்தது. அதை தற்போதைய அரசு பிரித்து தனி தனியாக மாற்றிவிட்டது.
அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் ஒரு பீதியான குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வருகிற டிசம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
அதில் நான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி. அதில் வெற்றி பெற்று உளவுத்துறை மற்றும் வெளிப்புற கண்காணிப்பை மீண்டும் உருவாக்கி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன்” என்றார். #GotabayaRajapaksa #srilankablasts
கோவை:
கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை கோவை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. கைதானவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், கோவையில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவையில் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், வீடியோக்களின் அடிப்படையில் இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறினர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஜாமீனில் இருக்கும் கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும் , எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்கவே என்.ஐ.ஏ அதிகாரிகள் முயல்கின்றனர். எங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம் .
கைது செய்யப்பட்ட போது எங்களை அடித்து சித்ரவதை செய்து வாக்கு மூலம் வாங்கினார்கள். என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த கோபத்தில் எங்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தகவல் பரப்புகிறது.
கைதாகி இருந்த போது என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 முறை காவலில் எடுத்து என்னிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க எங்கள் மீது பழியை போட பார்க்கின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான் அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். இலங்கையை சேர்ந்த ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே என்.ஐ.ஏ வின் நோக்கமாக இருக்கிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #srilankablasts

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.

அப்போது ஓட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டுவெடிப்பில் சிக்கினர். இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #SriLankablasts #Colomboblast

இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பு தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் தயாராகி வருவதாக கடந்த 4-ந் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது.
இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில், “கொழும்பில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்தியாவின் இந்த எச்சரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்களும், ராணுவ தளபதிகளும் சற்று அலட்சியமாக கருதினார்கள். என்றாலும் இலங்கை போலீஸ் தலைவர், பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பினார்.

போலீசாரின் அலட்சியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டப்படி தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டனர்.
கொழும்பில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறிய பிறகும் நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். உண்மையில் நாங்கள் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம்.
சர்வதேச உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்”
இவ்வாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இந்தியா உதவியுடன் போரில் தோற்கடித்த இலங்கை அதன்பிறகு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக கெடுபிடிகள் செய்யப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறைக்கப்பட்டன. இந்த பாதுகாப்பு குறைபாடு இலங்கைக்கு நேற்று மிகப் பெரிய இழப்பை கொடுத்து விட்டது. #SriLankablast #RanilWickremesinghe






